search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கூட்டுறவு அதிகாரி வீட்டில் பணம்-ஆவணங்கள் கொள்ளை
    X

    கூட்டுறவு அதிகாரி வீட்டில் பணம்-ஆவணங்கள் கொள்ளை

    • மதுரை அருகே கூட்டுறவு அதிகாரி வீட்டில் பணம்-ஆவணங்கள் கொள்ளையடிக்கப்பட்டது.
    • ரூ. 2 ஆயிரம் ரொக்கம், ஏ.டி.எம்.-ஆதார் கார்டுகள் ஆகியவற்றை திருடிக்கொண்டு தப்பினர்.

    மதுரை

    மதுரை கே.புதூர் மகாலட்சுமி நகரைச் சேர்ந்தவர் முருகானந்தம். இவர் திண்டுக்கல் மாவட்ட கூட்டுறவு நிறுவனத்தில் அதிகாரியாக உள்ளார்.

    சம்பவத்தன்று இரவு இவரது வீட்டுக்குள் புகுந்த மர்ம நபர்கள் பீரோவில் இருந்த ரூ. 2 ஆயிரம் ரொக்கம், ஏ.டி.எம்.-ஆதார் கார்டுகள் ஆகியவற்றை திருடிக்கொண்டு தப்பினர். இதுகுறித்த புகாரின் பேரில் தல்லாகுளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.

    மதுரை சதாசிவம் நகர் நக்கீரர் தெருவைச் சேர்ந்தவர் நாகராஜன். இவர் சம்பவத்தன்று வீட்டை பூட்டிவிட்டு வெளியே சென்று விட்டார். இதை நோட்டமிட்ட மர்ம நபர்கள் வீட்டுக்குள் புகுந்து 1 பவுன் 4 கிராம் நகை, வெள்ளி நகைகள் திருடு போயின.

    இதுகுறித்து அண்ணாநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×