search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அரசு ஆஸ்பத்திரிக்கு வந்தவர் மயங்கி விழுந்து சாவு
    X

    அரசு ஆஸ்பத்திரிக்கு வந்தவர் மயங்கி விழுந்து சாவு

    • மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு வந்தவர் மயங்கி விழுந்து இறந்தார்.
    • அரசு மருத்துவமனை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மதுரை

    மதுரை அரசு ஆஸ்பத்திரியில் 50 வயது மதிக்கத்தக்க ஒருவர் மருத்துவம் பார்ப்பதற்காக பிரசவ வார்டு அருகே உள்ள நோயாளிகள் காத்திருப்பு அறையில் உட்கார்ந்து இருந்தார். அப்போது அவருக்கு திடீர் மயக்கம் ஏற்பட்டது. இதில் அவர் நிலைதடுமாறி கீழே விழுந்தார். உடனே அவரை ஊழியர்கள் மீட்டு வார்டில் சேர்த்தனர். அங்கு டாக்டர்கள் பரிசோதித்ததில் அவருக்கு தீவிர உடல் நலபாதிப்பு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து அவர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.

    இந்தநிலையில் அந்த நபர் சிகிச்சை பலனின்றி இறந்தார். அவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்பது பற்றிய விவரம் தெரியவில்லை. இது தொடர்பாக மதுரை அரசு ஆஸ்பத்திரி சுகாதார ஆய்வாளர் ராஜேந்திரன் போலீசில் புகார் கொடுத்தார். இதன் அடிப்படையில் அரசு மருத்துவமனை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×