என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ரெயில்வே பள்ளியில் விளையாட்டு போட்டி
    X

    ரெயில்வே பள்ளியில் விளையாட்டு போட்டி

    • ரெயில்வே பள்ளியில் விளையாட்டு போட்டி நடந்தது.
    • 100-க்கும் மேற்பட்ட சிறுவர்கள் கலந்து கொண்டனர்.

    மதுரை

    மதுரை ரெயில்வே பள்ளியில் 10 வயதுக்கும் உட்பட்டோருக்கான மாநில சாரண- சாரணியர் விளையாட்டு போட்டி நடந்தது. கோட்ட மேலாளர் பத்மநாபன் அனந்த் தொடங்கி வைத்தார். முதுநிலை கோட்ட வர்த்தக மேலாளர் ரதிபிரியா, கோட்ட ஊழியர் நல அதிகாரி சங்கரன், உதவி அதிகாரி இசக்கி ஆகியோர் கலந்து கொண்டனர். விளையாட்டு போட்டியில் சென்னை, சேலம், திருச்சி, பாலக்காடு, திருவனந்தபுரம், மதுரை கோட்டங்கள் மற்றும் பொன்மலை, போத்தனூர், பெரம்பூர் பணிமனைகள் சார்பில் 100-க்கும் மேற்பட்ட சிறுவர்கள் கலந்து கொண்டனர். அவர்களுக்கு விளையாட்டு, நுண்ணுறிவு சார்ந்த போட்டிகள் நடந்து வருகிறது. நாளை வரை போட்டிகள் நடக்கிறது.

    Next Story
    ×