search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வாக்காளர் அட்டையுடன் ஆதார் இணைக்கும் சிறப்பு முகாம்
    X

    மதுரை மீனாட்சி பெண்கள் கல்லூரியில் வாக்காளர் அட்டையுடன் ஆதார் எண் இணைக்கும் முகாம் நடந்தது.

    வாக்காளர் அட்டையுடன் ஆதார் இணைக்கும் சிறப்பு முகாம்

    • வாக்காளர் அட்டையுடன் ஆதார் இணைக்கும் சிறப்பு முகாம் நடந்தது.
    • கலெக்டர் அனீஷ்சேகர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    மதுரை

    மதுரை மாவட்டத்தில் வாக்காளர் பட்டியலுடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணி கடந்த 1-ம் தேதி முதல் நடந்து வருகிறது.

    இந்த நிலையில் வாக்காளர்களுக்கு உதவி யாக மாவட்டம் முழுவதும் இன்று 2,718 மையங்களில் சிறப்பு முகாம் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நடத்தப்பட்டு வருகிறது.

    இதில் ஏராளமான பொதுமக்கள் வாக்காளர் அடையாள அட்டை மற்றும் ஆதார் எண் உள்ளிட்ட ஆவணங்களுடன் கலந்து கொண்டனர். அங்கு அவர்களுக்கு www.nvsp.in மற்றும் www.voterportal.eci.gov.in இணையதளம் வாயிலாக வாக்காளர் பட்டியலுடன் ஆதார் எண் இணைக்கப்பட்டது.

    இதுதவிர வாக்குச்சாவடி பணியாளர்கள் நேரடியாக வீடுகளுக்கும் சென்று படிவம் 6பி மற்றும் கருடா கைப்பேசி செயலி மூலம் ஆதார் எண்ணை இணைக்கும் பணியில் ஈடுபட்டனர். மதுரை வாக்கு பதிவு மையங்களில் ஆதார் கார்டு எண் இணைக்கும் பணியை மாவட்ட கலெக்டர் அனீஷ்சேகர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    Next Story
    ×