search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தோழி வீட்டில் நகை திருடிய பள்ளி ஆசிரியை கைது
    X

    தோழி வீட்டில் நகை திருடிய பள்ளி ஆசிரியை கைது

    • தோழி வீட்டில் நகை திருடிய பள்ளி ஆசிரியை கைது செய்யப்பட்டார்.
    • செந்தில் நாயகி, தான் வாங்கிய 9 பவுன் 4 கிராம் தங்க நகையை ரெய்னா பேகத்திடம் காண்பித்துள்ளார்.

    திருமங்கலம்

    மதுரை மாவட்டம் திருமங்கலம் சங்கர் நகர் 5-வது தெருவைச் சேர்ந்தவர் ராமகிருஷ்ணன். இவரது மனைவி செந்தில் நாயகி (வயது51). இவர் மதுரையில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார்.

    இவருடன் மதுரை தலை விரித்தான்சந்து பகுதியைச் சேர்ந்த அகமத்ராஜா மனைவி உமா மகேஸ்வரி என்ற ரெய்னாபேகம்(32) ஆசிரியையாக பணியாற்று கிறார். இருவரும் கடந்த 8 வருடங்களாக சினேகிதியாக உள்ளனர். இந்நிலையில் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு ரெய்னா பேகம் லேப்டாப் கொடுப்பதற்காக திருமங்கலத்தில் உள்ள செந்தில்நாயகி வீட்டுக்கு வந்துள்ளார். அப்போது செந்தில் நாயகி, தான் வாங்கிய 9 பவுன் 4 கிராம் தங்க நகையை ரெய்னா பேகத்திடம் காண்பித்துள்ளார்.

    மறுநாள் காலையில் வீட்டின் படுக்கையறை பீரோவில் இருந்த நகை மாயமாகி இருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த செந்தில்நாயகி, தோழி ரெய்னா பேகத்திடம் நகை குறித்து கேட்டுள்ளார். அப்போது அவர் தனக்கு எதுவும் தெரியாது என கூறியுள்ளார்.

    இது தொடர்பாக திருமங்கலம் நகர் காவல் நிலையத்தில் செந்தில் நாயகி புகார் கொடுத்தார். அதில் நகை திருட்டு தொடர்பாக ரெய்னா பேகம் மீது சந்தேகம் இருப்பதாக தெரிவித்து இருந்தார். இதன் அடிப்படையில் போலீசார் அவரிடம் கிடுக்கிப்பிடி விசாரணை மேற்கொண்டனர்.

    இதில் செந்தில்நாயகியின் நகையை திருடியது ரெய்னா பேகம் என தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர்.

    Next Story
    ×