search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வாகனம் மோதி தூய்மை பணியாளர் பலி
    X

    வாகனம் மோதி தூய்மை பணியாளர் பலி

    • திருமங்கலம் அருகே வாகனம் மோதி தூய்மை பணியாளர் பலியானார்.
    • கள்ளிக்குடி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    திருமங்கலம்

    மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே கள்ளிக்குடி போலீஸ் சரகம் சிவரக்கோட்டை பகுதியை சேர்ந்தவர் பாண்டி (வயது48). இவருக்கு பாண்டியம்மாள் என்ற மனைவியும், ஒரு மகன், 2 மகள்கள் உள்ளனர்.பாண்டி சிவரக்கோட்டை ஊராட்சியில் தற்காலிக தூய்மை பணியாளராக பணியாற்றி வந்தார்.

    இந்தநிலையில் நேற்று இரவு சிவரக்கோட்டை நான்கு வழி சாலையை பாயண்டி கடக்க முயன்றார். அப்போது திருமங்கலத்தில் இருந்து விருதுநகர் நோக்கி வந்த அடையாளம் தெரியாத வாகனம் பாண்டி மீது மோதி விட்டு நிற்காமல் சென்றது. விபத்தில் தூக்கி வீசப்பட்ட பாண்டி படுகாயமடைந்து ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

    விபத்து குறித்து தகவ லறிந்த கள்ளிக்குடி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருமங்கலம் அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விபத்து ஏற்படுத்திய அடையாளம் தெரியாத வாகனம் குறித்து கள்ளிக்குடி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    Next Story
    ×