என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
பாதியில் நின்ற சாலை பராமரிப்பு பணி
- பாதியில் நின்ற சாலை பராமரிப்பு பணிகளை சரிசெய்ய வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.
- பாலம் கட்டிய தோடு விட்டுவிட்டு சரளை கற்களை கொட்டி விட்டு சென்றுவிட்டனர்.
வாடிப்பட்டி
மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே நீரேத்தாளில் இருந்து மேட்டு நீரேத்தானுக்கு சுமார் 2 கிலோ மீட்டர் தூரத்திற்கு தார் சாலை அமைக்கப்பட்டுள்ளது.இதில்பெரியாறு பாசன கால்வாய் துருத்தி ஓடை வழியாக வடகரை கண்மாய்க்கு தண்ணீர் செல்கிறது.அந்த ஓடையின் குறுக்கே சுமார் 50 ஆண்டுகளுக்கு முன் தரைப்பாலம் அமைக்கப்பட்டு இருந்தது. இதனால் ஓடையில் தண்ணீர் அதிக அளவில் வரும் போது பாலம் மூழ்கிவிடும். அப்போது 2 கிராமங்களுக்கு இடையே போக்குவரத்து தடை ஏற்பட்டு வந்தது. பாலத்தில் தண்ணீர் வற்றிய பிறகுதான் நடந்தோ, வாகனங்களோ செல்ல முடியும். இந்தப் பாலத்தை உயர்த்தி கட்டிட பலமுறை சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.
இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன் பாலம் உயர்த்தி கட்டும் கட்டுமான பணி நடந்தது. கடந்த மாதம் பால கட்டுமானபணி முடிந்த பின் பாலத்தில் இருபுறத்திலும் சரளை கற்கள் கொட்டி தார் சாலை அமைக்க பணிகள் தொடங்கப்பட்டது. ஆனால் பாலம் கட்டிய தோடு விட்டுவிட்டு சரளை கற்களை கொட்டி விட்டு சென்றுவிட்டனர்.
இதனால் வாகன ஓட்டிகள் பாலத்தை கடக்கும் போது சரளை கற்களில் சறுக்கி விழுந்து காயமடைந்து வருகின்றனர். சைக்கிள், மொபட், மோட்டார் சைக்கிள்களில் செல்பவர்கள் மிகவும் அவதிப்படுகின்றனர். எனவே பாலப்பணி முழுமை பெறுவதற்கு போர்க்கால அடிப்படையில் தார் சாலை உடனே அமைக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்