என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தனியார் நிறுவன ஊழியர்-தொழிலாளி தற்கொலை
    X

    தனியார் நிறுவன ஊழியர்-தொழிலாளி தற்கொலை

    • தனியார் நிறுவன ஊழியர்-தொழிலாளி தற்கொலை செய்து கொண்டனர்.
    • கூடக்கோவில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகிறார்கள்.

    திருமங்கலம்

    மதுரை சம்மட்டிபுரத்தை சேர்ந்தவர் முருகன். இவரது 2-வது மகன் சிவனேஷ் (வயது 28). இவர் திருமங்க லம் கல்லுப்பட்டி அருகே தேவன்குறிச்சியில் உள்ள தனது பாட்டி வீட்டில் வசித்து வந்தார்.

    பட்டதாரியான சிவனேஷ், அதே பகுதி யில் உள்ள தனியார் நிறுவ னத்தில் பணியாற்றி வந்தார். இவருக்கு குடிபழக்கம் இருந்ததாக கூறப்படுகிறது.

    இந்த நிலையில் சம்பவத் தன்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் சிவனேஷ் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். டி.கல்லுப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    மதுரை மாவட்டம் கூடக்கோவிலை சேர்ந்தவர் மாரியப்பன் (48), கட்டிட தொழிலாளி. இவரது மனைவி பாண்டியம்மாள். கடந்த சில மாதங்களாக கணவன்-மனைவி இடையே பிரச்சினை ஏற்பட்டது.

    சம்பவத்தன்று வீட்டில் இருந்த மாரியப்பன் வாழ்க்கையில் விரக்தி அடைந்து தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து கூடக்கோவில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகிறார்கள்.

    Next Story
    ×