search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தபால் ஊழியரிடம் ரூ. 10 லட்சம் மோசடி
    X

    தபால் ஊழியரிடம் ரூ. 10 லட்சம் மோசடி

    • தபால் ஊழியரிடம் ரூ. 10 லட்சம் மோசடி செய்தவரை போலீசார் தேடி வருகின்றனர்.
    • தபால் அலுவலகத்தில் பணி நிரந்தரம் செய்து தருவதாக ஆசை வார்த்தை கூறினார்.

    மதுரை

    மதுரை திருமங்கலத்தைச் சேர்ந்தவர் ரமேஷ்குமார் (வயது 42). இவர் அண்ணா நகர் குற்றப்புலனாய்வு பிரிவு போலீசில் புகார் மனு கொடுத்துள்ளார். அதில் கூறியிருப்பதாவது:-

    நான் உசிலம்பட்டி தபால் அலுவலகத்தில் தற்காலிக ஊழியராக வேலை பார்த்து வருகிறேன். சில மாதங்களுக்கு முன்பு பணி நிரந்தரம் ஆவதற்கான முயற்சிகளில் தீவிரமாக ஈடுபட்டு வந்தேன். அப்போது திருமங்கலத்தைச் சேர்ந்த கண்ணன் (வயது 41) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது.

    தல்லாகுளம் தபால் அலுவலகத்தில் வேலை பார்த்து வரும் கண்ணன் என்னிடம் தபால் அலுவலகத்தில் பணி நிரந்தரம் செய்து தருகிறேன். இதற்காக நீங்கள் 10 லட்சம் ரூபாய் பணம் கொடுக்க வேண்டி இருக்கும்" என்று ஆசை வார்த்தைகள் கூறினார்.

    இதனை நம்பிய நான், அவரிடம் 10 லட்சம் ரூபாயை கொடுத்தேன். அதனை பெற்றுக் கொண்ட கண்ணன் ஏற்கனவே வாக்குறுதி அளித்தபடி பணி நிரந்தரம் செய்து தரவில்லை. எனவே நான் அவரிடம் பணத்தை திருப்பி கேட்டேன். ஆனால் அவர் பணத்தை திருப்பி தர மறுத்து வருகிறார். எனவே போலீசார் உரிய நடவடிக்கை எடுத்து பணத்தை மீட்டுத்தர வேண்டும்.

    இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டு இருந்தது.

    அதன் அடிப்படையில் அண்ணாநகர் குற்றப் புல னாய்வு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் அனுராதா வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    Next Story
    ×