என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
தபால் ஊழியரிடம் ரூ. 10 லட்சம் மோசடி
- தபால் ஊழியரிடம் ரூ. 10 லட்சம் மோசடி செய்தவரை போலீசார் தேடி வருகின்றனர்.
- தபால் அலுவலகத்தில் பணி நிரந்தரம் செய்து தருவதாக ஆசை வார்த்தை கூறினார்.
மதுரை
மதுரை திருமங்கலத்தைச் சேர்ந்தவர் ரமேஷ்குமார் (வயது 42). இவர் அண்ணா நகர் குற்றப்புலனாய்வு பிரிவு போலீசில் புகார் மனு கொடுத்துள்ளார். அதில் கூறியிருப்பதாவது:-
நான் உசிலம்பட்டி தபால் அலுவலகத்தில் தற்காலிக ஊழியராக வேலை பார்த்து வருகிறேன். சில மாதங்களுக்கு முன்பு பணி நிரந்தரம் ஆவதற்கான முயற்சிகளில் தீவிரமாக ஈடுபட்டு வந்தேன். அப்போது திருமங்கலத்தைச் சேர்ந்த கண்ணன் (வயது 41) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது.
தல்லாகுளம் தபால் அலுவலகத்தில் வேலை பார்த்து வரும் கண்ணன் என்னிடம் தபால் அலுவலகத்தில் பணி நிரந்தரம் செய்து தருகிறேன். இதற்காக நீங்கள் 10 லட்சம் ரூபாய் பணம் கொடுக்க வேண்டி இருக்கும்" என்று ஆசை வார்த்தைகள் கூறினார்.
இதனை நம்பிய நான், அவரிடம் 10 லட்சம் ரூபாயை கொடுத்தேன். அதனை பெற்றுக் கொண்ட கண்ணன் ஏற்கனவே வாக்குறுதி அளித்தபடி பணி நிரந்தரம் செய்து தரவில்லை. எனவே நான் அவரிடம் பணத்தை திருப்பி கேட்டேன். ஆனால் அவர் பணத்தை திருப்பி தர மறுத்து வருகிறார். எனவே போலீசார் உரிய நடவடிக்கை எடுத்து பணத்தை மீட்டுத்தர வேண்டும்.
இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டு இருந்தது.
அதன் அடிப்படையில் அண்ணாநகர் குற்றப் புல னாய்வு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் அனுராதா வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்