search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மதுரை ஆதீனத்தின் விஷம பிரசாரம்: வக்கீல் பசும்பொன் பாண்டியன் அறிக்கை
    X

    வக்கீல் பசும்பொன்பாண்டியன்

    மதுரை ஆதீனத்தின் விஷம பிரசாரம்: வக்கீல் பசும்பொன் பாண்டியன் அறிக்கை

    • மதுரை ஆதீனத்தின் விஷம பிரசாரத்தை திராவிட பாசறை முறியடிக்கும் என்று வக்கீல் பசும்பொன் பாண்டியன் கூறியுள்ளார்.
    • மதுரை ஆதீனம் தி.மு.க.வையும், தமிழக அரசையும் மிகவும் கடுமையாக விமர்சித்து பேசியுள்ளார்.

    மதுரை

    அண்ணா திராவிட மக்கள் முன்னேற்ற கழக பொதுச் செயலாளர் வழக்க றிஞர் சே. பசும்பொன் பாண்டியன் இன்று வெளி யிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    ஒன்றிய பா.ஜனதா அரசுக்கு ஆதீனங்கள் வக்காலத்து வாங்கி வருவதால் அவர்களது ஆன்மீக ப்பணி பயங்கர வாத ஆர்.எஸ்.எஸ். பணியாக மாறும் அபாயம் ஏற்பட்டு வருகிறது. மதுரையில் விஷ்வ இந்து பரிஷத் ஆதரவோடு நடைபெற்ற துறவிகள் மாநாட்டில் முஸ்லிம்கள் தீவிரவாதிகள் என்றும், கம்யூனிஸ்ட்கள் ஆபத்தானவர்கள் என்றும் குறிப்பாக மதுரை ஆதீனம் தி.மு.க.வையும், தமிழக அரசையும் மிகவும் கடுமையாக விமர்சித்து பேசியுள்ளார்.

    துறவிகள் தி.மு.க. அரசை மிரட்டி பேசியதோடு ஒட்டு மொத்தத்தில் துறவிகள் மாநாடு என்ற பெயரில் வெறுப்பைக் கக்கும் மாநாடாக நடந்துள்ளது. சிறுபான்மையினரை வசைமாறி பொழிந்ததோடு மதுரை மீனாட்சி அம்மனையும் கேலி செய்து அவதூறு சேற்றை அள்ளி வீசி இருக்கிறார்கள், ஆதீனங்கள் சைவத்தையும் தமிழையும் வளர்க்கின்ற பணியை மட்டுமே செய்ய வேண்டும்.

    ஆதீனங்கள் ஆன்மீக பணியை விட்டு ஆர்.எஸ்.எஸ். பணியில் ஈடுபட்டால் மக்கள் சக்திக்கு முன் ஆதீனங்கள் தாக்க பிடிக்க முடியுமா? கோவில் நிலங்க ளை தங்களி டம் ஒப்படைக்க வேண்டு மென மதுரை ஆதீனம் கூறுகின்றார்.

    ஏற்கெனவே ஊழல் முறைகேடு நடைபெற்றதால் தான் அறநிலையத்துறை உருவாக்கப்பட்டது. அறநிலையத்துறையால் தான் கோவில்களை பாதுகாக்க முடியும். மதுரை ஆதீனத்துக்கு நிலங்கள் எப்படி வந்தது ? அவர் யார் யாருக்கு நிலங்களை கொடுத்துள்ளார் என்று பொதுவெளியில் விவாதிக்க தயாரா ?

    தமிழக முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் திராவிட மாடல் அரசாக நீதிக்கட்சித் தலைவர் பனகல் அரசர் தொடங்கிய அறநிலையத்துறையை பாதுகாத்து வருகிறார். அந்த ஆட்சிக்கு எதிராக துறவிகள் மாநாடு என்ற பெயரில் மதுரை மண்ணில் விஷத்தை கக்கினால் அதை முறியடிப்பதற்கு திராவிட பட்டறை உரிய முறையில் ஆதீனங்களை சந்திப்போம் என எச்சரிக்க கடமைப்பட்டுள்ளேன்,

    மதுரை ஆதீனம் ஆர்.எஸ்.எஸ்.சின் அறிவிக்கப்படாத செய்தி தொடர்பாளராக செயல்பட்டு வருவதோடு மதுரை ஆதீனமடத்தை ஆர்.எஸ்.எஸ்.சின் பயங்கரவாத கூடாரமாக மாற்றி வருவதை மதுரை மக்கள் ஒரு போதும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். மதுரை ஆதீனத்தின் விஷம பிரசா ரத்தை திராவிட பாசறை முறியடிக்கும் என மதுரை ஆதீனத்திற்கு எச்சரிக்க கடமைப்பட்டுள்ளேன்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    Next Story
    ×