search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    புரவி எடுப்பு திருவிழா
    X

    புரவி எடுப்பு திருவிழா

    • மேலூர் அருகே கருங்காலக்குடியில் அய்யனார் கோவில் புரவி எடுப்பு திருவிழா நடந்தது.
    • மண்ணால் ஆன சுமார் 20-க்கும் மேற்பட்ட குதிரைகளை (புரவிகள்) பக்தர்கள் நேர்த்திக்கடனாக சுமந்து வந்தனர்.

    மேலூர்

    மேலூர் அருகே உள்ள கருங்காலக்குடியில் சேவுகப்பெருமாள் அய்யனார் கோயில் புரவி எடுப்பு திருவிழா 21 நாட்களுக்கு முன்பு காப்புகட்டுதலுடன் தொடங்கியது. அன்று முதல் பக்தர்கள் விரதமிருந்து வந்தனர்.

    திருவிழாவின் முதல்நாளான நேற்று குயவர் திடலில் இருந்து மந்தை பொட்டலுக்கு மண்ணால் ஆன சுமார் 20-க்கும் மேற்பட்ட குதிரைகளை (புரவிகள்) பக்தர்கள் நேர்த்திக்கடனாக சுமந்து வந்தனர்.

    2-வது நாளான இன்று மந்தை பொட்டலில் இருந்து 2 கி.மீ தூரமுள்ள சேவுகபெருமாள் கோவிலுக்கு பக்தர்கள் புரவிகளை சுமந்து சென்றனர்.

    மழை வேண்டி, விவசாயம் செழிக்க இந்த திருவிழா கொண்டாடப்பட்டு வருகிறது. இதில் சுற்றுவட்டாரத்தை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு வழிபாடு செய்தனர்.

    Next Story
    ×