search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மதுரையில் இரவு நேர பஸ்கள் குறைப்பால் பயணிகள் கடும் அவதி
    X

    மதுரையில் இரவு நேர பஸ்கள் குறைப்பால் பயணிகள் கடும் அவதி

    • இரவு நேர பஸ்கள் குறைப்பால் பயணிகள் கடும் அவதியடைந்துள்ளனர்.
    • இது தொடர்பாக சம்பந்தப்பட்ட போக்குவரத்து துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க முன் வருவார்களா?

    மதுரை

    மதுரையின் மையப் பகுதியில் பெரியார் பஸ் நிலையம் அமைந்துள்ளது. இதன் அருகிலேயே ரெயில் நிலையமும் உள்ளது. வெளி யூரில் இருந்து பல்வேறு பணி நிமித்தமாக வரும் பயணிகள் மாட்டுத்தாவணி பஸ் நிலையத்தில் இருந்து பெரியார் பஸ் நிலையம் சென்று பல்வேறு இடங்களுக்கு செல்வார்கள். மாட்டுத்தாவணி பஸ் நிலையத்தில் இரவு நேரத்தில் ஆரப்பாளையம் மற்றும் பெரியார் பஸ் நிலையங்களுக்கு சில பஸ்கள் இயக்கப்படுகிறது.

    இந்த நிலையில் சில நாட்களில் இரவு திருமங்கலத்துக்கு 4 பஸ்கள் இயக்கப்படுவதற்கு பதிலாக ஒரு பஸ் மட்டுமே இயக்கப்ப டுவதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப் பட்டது. இதனால் பெரியார் பஸ் நிலையத்தில் பயணிகள் அருகில் உள்ள இடங்களுக்கு செல்ல 2 மணி நேரத்துக்கும் மேலாக காத்து இருக்கும் சூழ்நிலை ஏற்பட்டு வருகிறது.

    இதனால் பாதிக்கப்பட்ட பயணிகள் வேறு வழியின்றி ஆட்டோக்களில் தாங்கள் செல்ல வேண்டிய இடங்களுக்கு சென்றனர். அப்போது சில ஆட்டோ டிரைவர்கள் முதலில் ஒரு தொகையை கூறுகின்றனர். பின்னர் கூடுதல் தொகையை கேட்கின்றனர்.

    இது பற்றி கேட்டால் தாங்கள் சொல்வது தான் சரியான தொகை என்று அடம்பிடித்து பணத்தைப் பெற்றுச் செல்கின்றனர். இப்படி தில்லு முல்லு செய்யும் ஆட்டோ டிரைவர்களால் மற்ற ஆட்டோ டிரைவர்களின் பெயரும் கெடுகிறது.

    எனவே இது போன்ற அடாவடியில் ஈடுபடும் ஆட்டோ டிரைவர்களை சங்க நிர்வாகிகள் கண்டறிந்து அவர்கள் மீது உரிய நடவடி க்கை எடுக்க வேண்டும்.மேலும் பயணிகள் நலன் கருதி இரவு நேரங்களில் கூடுதல் பஸ்கள் இயக்க வேண்டும்.

    திருமங்கலத்துக்கும் தேவையான அளவில் பஸ்கள் இயக்க வேண்டும் என்று பஸ் பயணிகள் கோரிக்கை உள்ளனர். இது தொடர்பாக சம்பந்தப்பட்ட போக்குவரத்து துறை அதிகாரிகள் நடவடிக்கை

    Next Story
    ×