என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நெல்லை-தென்காசி இடையே மின்சார ரெயில் பாதையில் அதிகாரிகள் நாளை ஆய்வு
    X

    நெல்லை-தென்காசி இடையே மின்சார ரெயில் பாதையில் அதிகாரிகள் நாளை ஆய்வு

    • நெல்லை-தென்காசி இடையே மின்சார ரெயில் பாதையில் அதிகாரிகள் நாளை ஆய்வு நடக்கிறது.
    • காலை 9.30 மணிக்கு தொடங்கி மதியம் 1.45 மணி வரை நடைபெறும்.

    மதுரை

    மதுரை கோட்ட ரெயில்வேக்கு உள்பட்ட பகுதிகளில் உள்ள ரெயில் நிலையங்களுக்கு இடையே மின்சார ரெயில் இயக்க வசதிக்காக மின்மயமாக்கல் பணிகள் நடந்து வருகிறது. இதில் மதுரை கோட்டத்துக்கு உட்பட்ட கேரள மாநில எல்லை பகுதிகளில் மின்மய மாக்கல் பணிகள் முடிந்து ஒரு வருடத்துக்கும் மேலா கிறது.

    இதற்கிடையே நெல்லை -தென்காசி இடையேயான 72 கி.மீ. தூர ரெயில் பாதையில் மின்மயமாக்கல் பணிகள் நடந்து வந்தது. இந்த பணிகள் முடிந்து தற்போது போக்குவரத்துக்கு தயாராக உள்ளது. இதற்கு முன்னோட்டமாக மின்சார ரெயில் என்ஜின் சோதனை நேற்று நடந்தது.

    அதனை தொடர்ந்து நெல்லையில் இருந்து சேரன்மகாதேவி, அம்பாச முத்திரம், கீழக்கடையம், பாவூர்சத்திரம் மற்றும் தென்காசி வரையிலான பாதையை தென்னக ரெயில்வே முதன்மை தலைமை மின்மயமாக்கல் என்ஜினீயர் நாளை (13-ந் தேதி) ஆய்வு செய்ய உள்ளார். இந்த ஆய்வானது நெல்லையில் இருந்து காலை 9.30 மணிக்கு தொடங்கி மதியம் 1.45 மணி வரை நடைபெறும்.

    பின்னர் தென்காசியில் இருந்து நெல்லைக்கு மின்சார ரெயில் சோதனை நடத்தப்படும். இந்த பணிகள் நாளை மாலை 4.30 மணியுடன் நெல்லை ரெயில் நிலையத்தில் முடிவடையும்படி திட்டமிடப் பட்டுள்ளதாக ரெயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

    மதுரை கோட்டத்தில் மின்மயமாக்கல் பணிகளை பொறுத்தமட்டில், விருது நகர்-தென்காசி இடையே 122 கி.மீ. தூரத்துக்கும், தென்காசி-பகவதிபுரம் இடையே 14 கி.மீ. தூரத்துக்கும், எடமன்-புனலூர் ரெயில் நிலைய எல்லை வரையிலான 8 கி.மீ. தூரம் ஆகிய பகுதிகளில் இந்த மாத இறுதிக்குள் முடிவடையும் என தெரிகிறது.

    Next Story
    ×