என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சமூக நல்லிணக்க நாள் கடைபிடிப்பு
    X

    சமூக நல்லிணக்க நாள் கடைபிடிப்பு

    • கருமாத்தூர் புனித கிளாரட் பள்ளியில் சமூக நல்லிணக்க நாள் கடைபிடிக்கப்பட்டது.
    • பல்சமய உரையாடல் குழு ஆசிரியர் செல்வராஜ் வரவேற்றார்.

    மதுரை

    மதுரை மாவட்டம் கருமாத்தூர் புனித கிளாரட் மேல்நிலைப்பள்ளியில் 'சமூக நல்லிணக்க நாள் கடைபிடிக்கப்பட்டது. தலைமை ஆசிரியர் சூசை மாணிக்கம் தலைமை தாங்கினார். செல்வமணி, உதவி தலைமை ஆசிரியர் ஜான்கென்னடி ஆகியோர் முன்னிலை வகித்தனர். பல்சமய உரையாடல் குழு ஆசிரியர் செல்வராஜ் வரவேற்றார்.

    இறைவன் படைப்பில் நாம் அனைவரும் சமம், ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்பது உள்ளிட்ட பல்வேறு கருத்துக்களை கூறி நல்லிணக்க நாள் குறித்து தலைமை ஆசிரியர் சூசைமாணிக்கம் பேசினார்.

    பல்சமய உரையாடல் குழு மாணவிகள் தனுஸ்ரீ, வித்யா, மோனிகா, பிரீத்தி ஆகியோர் கலந்துரையாடல் வழியாக சமூக மற்றும் மத நல்லிணக்கத்தை வலி யுறுத்தினர். நாட்டு நலப்பணித்திட்ட மாணவர் கள் நடனம் மூலம் தேசிய ஒருமைப்பாடு பற்றி விளக்கினர். முடிவில் ஆசிரியர் அற்புதம் நன்றி கூறினார்.

    நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர்கள் தமிழ் ெசல்வம், சுஜேந்திரன், ஜெயசீலன் ஆகியோர் விழா ஏற்பாடுகளை செய்தி ருந்தனர்.

    Next Story
    ×