search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தேசிய தரச்சான்று குழுவினர் ஆய்வு
    X

    ஆரம்ப காதார நிலையத்தில் தேசிய தரச்சான்று குழுவினர் ஆய்வு செய்தனர்.

    தேசிய தரச்சான்று குழுவினர் ஆய்வு

    • ஆனையூர் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் தேசிய தரச்சான்று குழுவினர் ஆய்வு செய்தார்.
    • தேசிய தரச்சான்றிதழ் பெறுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    மதுரை

    தேசிய தரச்சான்று திட்டமானது ஆரம்ப சுகாதார நிலையங்களின் தரம் மேம்பாட்டுக்காக நடத்தப்படும் திட்டம் ஆகும். இத்திட்டமானது சுயமதிப் பீடு, மாநில அரசின் மதிப் பீடு மற்றும் மத்திய அரசின் மதிப்பீட்டை தொடர்ந்து சான்று வழங்கப்படும்.

    மதுரை மாநகராட்சி ஆனையூர் நகர்ப்புற சுகா தார நிலையத்தில் மத்திய அரசின் குழு பேராசிரியர் அரசு மருத்துவமனை (நாசிக்) அபிஷேக் சுபாஷ் கோசாவி மற்றும் மாவட்ட தரக்கட்டுப்பாட்டு மருத்துவ அலுவலர் (சூரத்) டாக்டர் மகேந்திர பட்டேல் ஆகிய இருவரால் மதிப்பீடு அளிப்பது குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

    மதுரை மாநகராட்சி மஸ்தான்பட்டி மற்றும் முனிச்சாலை ஆகிய 2 நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள் தேசிய தரச்சான்றிதழ் (2022 முதல் 2023) பெற்றுள்ளது. மேலும் 2023-2024 ஆண்டில் 17 நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள் தேசிய தரச்சான்றிதழ் பெறுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    இக்குழுவினர் மருத்துவ மனையில் உள்ள ஆய்வகம், மருந்துகள் இருப்பு, பரா மரிக்கப்படும் பதிவேடுகள் உள்ளிட்ட பல்வேறு மருத்துவ சேவைகள் குறித்து ஆய்வு மேற்கொண்டனர்.

    இந்த ஆய்வின்போது மேயர் இந்திராணி பொன் வசந்த், நகர்நல அலுவலர் வினோத்குமார், மக்கள் தொடர்பு அலுவலர் மகேஸ்வரன், உதவி நகர்நல அலுவலர் ஸ்ரீகோதை, மாவட்ட தர மருத்துவ அலு வலர் பொன்பாத்திப்பன் உள்பட பலர் உடன் இருந்தனர்.

    Next Story
    ×