search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    முளைப்பாரி திருவிழா
    X

    முளைப்பாரி திருவிழா

    • விஷ்ணு துர்க்கை அம்மன் கோவில் முளைப்பாரி திருவிழா நடந்தது.
    • சோழவந்தான் போலீசார் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

    சோழவந்தான்

    சோழவந்தான் அருகே திருவேடகம் வைகை ஆற்றுக்கரையில் அமைந்துள்ள விஷ்ணு துர்க்கை அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் 29-ம் ஆண்டு முளைப்பாரி திருவிழா 10 நாட்கள் நடைபெற்றது. 8-ம் நாள் காலையில் பக்தர்கள் பால்குடம் மற்றும் அக்னி சட்டி எடுத்து வந்தனர். இதைத்தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்று அன்னதானம் வழங்கப்பட்டது.மாலை பொங்கல் வைத்து, மாவிளக்கு எடுத்து வழிபட்டனர். தொடர்ந்து 9-ம் நாளில் அம்மனுக்கு சந்தன காப்பு நடைபெற்றது. இதைத்தொடர்ந்து பெண்கள் முளைப்பாரி எடுத்து ஊர்வலமாக வந்தனர். அம்மன் வீதி உலா நடந்தது. 10-ம் நாள் மஞ்சள் நீராட்டு விழா நடைபெற்று கிடாய் வெட்டி விழா நிறைவு பெற்றது. சோழவந்தான் போலீசார் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

    Next Story
    ×