என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
மில் ஊழியர் வீட்டில் நகை, ஆவணங்கள் திருட்டு
Byமாலை மலர்25 Jun 2022 8:44 AM GMT
- மில் ஊழியர் வீட்டில் நகை, ஆவணங்கள் திருடு போயின.
- இது குறித்த புகாரின் பேரில் எஸ்.எஸ்.காலனி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மதுரை
மதுரை விராட்டிபத்து, முத்துத்தேவர் காலனியைச் சேர்ந்தவர் ராஜேந்திரன் (வயது 62). இவர் மதுரா கோட்ஸ் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து ஓய்வு பெற்றவர்.
சம்பவத்தன்று காலை இவர் வீட்டை பூட்டிவிட்டு வெளியே சென்றார். மர்ம நபர்கள் முன் கதவு பூட்டை உடைத்து வீட்டுக்குள் புகுந்து பீரோவில் இருந்த 14 பவுன் தங்க நகைகள், பாஸ்போர்ட் மற்றும் ஆவணங்களை திருடிச் சென்று விட்டனர்.
ராஜேந்திரன் மதியம் வீடு திரும்பியபோது கதவு உடைந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். அவர் பதறி அடித்துக்கொண்டு வீட்டுக்குள் சென்று பார்த்தார். பீரோவில் இருந்த 14 பவுன் நகை, பாஸ்போர்ட் மற்றும் ஆவணங்கள் திருடுபோனது தெரியவந்தது. இது குறித்த புகாரின் பேரில் எஸ்.எஸ்.காலனி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X