search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மில் ஊழியர் வீட்டில் நகை, ஆவணங்கள் திருட்டு
    X

    மில் ஊழியர் வீட்டில் நகை, ஆவணங்கள் திருட்டு

    • மில் ஊழியர் வீட்டில் நகை, ஆவணங்கள் திருடு போயின.
    • இது குறித்த புகாரின் பேரில் எஸ்.எஸ்.காலனி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மதுரை

    மதுரை விராட்டிபத்து, முத்துத்தேவர் காலனியைச் சேர்ந்தவர் ராஜேந்திரன் (வயது 62). இவர் மதுரா கோட்ஸ் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து ஓய்வு பெற்றவர்.

    சம்பவத்தன்று காலை இவர் வீட்டை பூட்டிவிட்டு வெளியே சென்றார். மர்ம நபர்கள் முன் கதவு பூட்டை உடைத்து வீட்டுக்குள் புகுந்து பீரோவில் இருந்த 14 பவுன் தங்க நகைகள், பாஸ்போர்ட் மற்றும் ஆவணங்களை திருடிச் சென்று விட்டனர்.

    ராஜேந்திரன் மதியம் வீடு திரும்பியபோது கதவு உடைந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். அவர் பதறி அடித்துக்கொண்டு வீட்டுக்குள் சென்று பார்த்தார். பீரோவில் இருந்த 14 பவுன் நகை, பாஸ்போர்ட் மற்றும் ஆவணங்கள் திருடுபோனது தெரியவந்தது. இது குறித்த புகாரின் பேரில் எஸ்.எஸ்.காலனி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×