என் மலர்
உள்ளூர் செய்திகள்

ரெயில் மோதி மனநலம் பாதித்த வாலிபர் பலி
- செக்கானூரணி அருகே ரெயில் மோதி மனநலம் பாதித்த வாலிபர் பலியானார்.
- தற்கொலையா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மதுரை
மதுரை செக்கானூரணி பகுதியில் உள்ள ரெயில் தண்டவாளத்தில் இன்று காலை உடல் துண்டான நிலையில் ஆண் பிணம் கிடந்தது. இதுகுறித்து அந்தப்பகுதி மக்கள் செக்கானூரணி போலீசார் மற்றும் ரெயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
இதன் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் சிதறிக்கிடந்த உடல் பாகங்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் தண்டவாள பகுதி யில் கிடந்த ஆவணங்களை வைத்து இறந்தவர் யார்? என போலீசார் விசாரணை நடத்தினர்.
இதில் தண்டவாளத்தில் பிணமாக கிடந்தவர் செக்கானூரணி அருகே உள்ள கண்ணனூர் கருங்காபட்டியை சேர்ந்த பவுன்சாமி மகன் விஸ்வநாதன்(வயது45) என தெரியவந்தது. குடும்ப பிரச்சினை காரணமாக இவரது மனைவி விவா கரத்து செய்துவிட்டார். இதனால் சகோதரர்கள் வீட்டில் வசித்து வந்த விஸ்வநாதனுக்கு கடந்த சில மாதங்களாக மனநலம் பாதிப்பு இருந்ததாக கூறப்படுகிறது.
நேற்று இரவு வீட்டில் இருந்து வெளியே சென்ற விஸ்வநாதன் தண்ட வாளத்தை கடக்க முயன்ற போது ரெயில் மோதி இறந்தாரா? அல்லது ரெயில் முன்பாய்ந்து தற்கொலை செய்து கொண்டாரா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.






