search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சுறுசுறுப்பான வாழ்க்கை முறையை கடைபிடிக்க ேவண்டும்-மீனாட்சி மிஷன் ஆஸ்பத்திரி டாக்டர்கள் வலியுறுத்தல்
    X

    மீனாட்சி மிஷன் ஆஸ்பத்திரி டாக்டர்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் நீரிழிவு துறையின் முதுநிலை டாக்டர் மகேஷ் பாபு, துறைத்தலைவர் டாக்டர் கிருஷ்ண மூர்த்தி, மருத்துவமனை நிர்வாகி டாக்டர் கண்ணன் ஆகியோர் பேசியபோது எடுத்த படம்.

    சுறுசுறுப்பான வாழ்க்கை முறையை கடைபிடிக்க ேவண்டும்-மீனாட்சி மிஷன் ஆஸ்பத்திரி டாக்டர்கள் வலியுறுத்தல்

    • நீரிழிவு நோயை தடுக்க சுறுசுறுப்பான வாழ்க்கை முறையை கடைபிடிக்க ேவண்டும்.
    • மீனாட்சி மிஷன் ஆஸ்பத்திரி டாக்டர்கள் வலியுறுத்தினர்.

    மதுரை

    ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 14-ந் தேதி உலக நீரிழிவு தினம் கடை பிடிக்கப்படுகிறது. அதை முன்னிட்டு மதுரை மீனாட்சி மிஷன் ஆஸ்பத்தி ரியில் டாக்டர்கள் சந்திப்பு நிகழ்வு நடந்தது. அதில் நீரிழிவு துறையின் முதுநிலை டாக்டர் மகேஷ் பாபு துறைத்தலைவர் டாக்டர் கிருஷ்ண மூர்த்தி மற்றும் மருத்துவமனை நிர் வாகி டாக்டர் கண்ணன் ஆகியோர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    இந்தியாவில் 10 கோடிக்கும் அதிக மான மக்களை நீரிழிவு நோய் பாதித் துள்ளது. ஆனாலும் நாட்டில் 50 சத வீதத்திற்கும் அதிகமான நோய் பாதிப் புகள் கண்டறியப்படாத நிலை உள்ளது. இது நீரிழிவு நோய் சுமையைக் குறைப்ப தில் மிகப்பெரிய சவாலாக உள்ளது.

    ஒவ்வொரு தனிநபரும் குறிப்பாக 35 வயதுக்கு மேற்பட்டவர்கள். மர பணு ரீதியாக இந்த நோய் வர வாய்ப்பு உள்ளவர்கள் அல்லது உடல் பருமன் உள்ளவர்கள் அதன் விளை வுகளை புரிந்துகொண்டு தகுந்த நடவ டிக்கை எடுப்பதன் மூலம் அதில் இருந்து பாதுகாத்து கொள்ளலாம். நீரிழிவு நோயை முழுமையாக மதிப்பீடுவதற்கு ரத்தத்தில் சர்க்கரையின் அளவு- உணவுக்கு முன், ரத்தத்தில் சர்க்கரையின் அளவு- உணவுக்கு பின், ஹீமோகுளோபின் ஏ1சி நிலை பரிசோதனை ஆகிய 3 வகையான ரத்த பரிசோதனைகள் முக்கியம்.

    நீரிழிவு நோயை தடுக்க மக்கள் இள மையாக இருக்கும்போதே சுறுசுறுப் பான வாழ்க்கை முறையை மேற் கொள்ள வேண்டும். குறைந்தது 45 நிமிடங்க ளாவது நீச்சல், ஜாகிங் அல் லது நடைபயிற்சி போன்ற உடற்பயிற்சிகள் செய்வது முக்கியம். யோகா மற்றும் தியான பயிற்சி செய்வது மிக ஆபத்தான நோய் காரணியாக இருக்கக்கூடிய மன அழுத்தத்தைக் குறைக் கும். நீரிழிவு நோய் ஆபத்தில் உள்ள மக்கள் கார்போ ஹைட்ரேட் மற்றும் கொழுப்பு குறைவாக உள்ள உணவு களை எடுத்துக் கொள்ள பழகுவது நல்லது.

    சமச்சீர் உணவு, வழக்கமான உடற்பயிற்சி, 3 மாதங்களுக்கு ஒரு முறை ஆய்வகப் பரிசோதனைகள் மற்றும் தகுதி வாய்ந்த மருத்துவரின் ஆலோசனை கள் மூலம் நீரிழிவு நோயை எந்த நிலையிலும் நிர்வகிக்க முடியும்.

    இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

    Next Story
    ×