என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
மதனகோபால சுவாமி கோவில் கும்பாபிஷேகம்
- மதனகோபால சுவாமி கோவில் கும்பாபிஷேகம் நடந்தது.
- கும்பாபிஷேக ஏற்பாடுகளை கோவில் அதிகாரி சக்கரை அம்மாள் மற்றும் ஊழியர்கள் செய்திருந்தனர்.
மதுரை
மதுரை மேலமாசிவீதியில் உள்ள பிரசித்தி பெற்ற மதன கோபால சுவாமி கோவிலில் பாமா, ருக்மணி யுடன் 2 கைகளில் புல்லாங் குழல் ஏந்தியபடி கிருஷ்ணர் பக்தர்களுக்கு அருள ்பாலித்து வருகிறார். இங்கு மாதந்தோறும் பல்வேறு திருவிழாக்கள் விமரிசை யாக கொண்டாடப்பட்டு வருகிறது.
கிருஷ்ண ஜெயந்தி, வைகுண்ட ஏகாதசி, மார்கழி பாவை நோன்பு நிகழ்ச்சிக ளில் திரளான பக்தர்கள் பங்கேற்பார்கள். இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் இந்த கோவிலில் கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப் ்பட்டது. அதன்படி கடந்த சில மாதங்களுக்கு முன்பு பாலாலய பூைஜகள் நடந்தது. தொடர்ந்து கோவில் கோபுரம், சன்னதி பிரகா ரங்கள் சீரமைக்கப்பட்டு வர்ணம் பூசி புதுப்பொலி வுடன் காட்சி அளித்தது.
இதனை கும்பாபிஷேக பூஜைகள், ஹோமங்கள் கடந்த 2 நாடகளுக்கு முன்பு தொடங்கியது. கோவில் வளாகத்தில் அமைக்கப்பட்டு உள்ள யாகசாலையில் அக்னி வளர்க்கப்பட்டு சிறப்பு பூைஜகள் நடந்தது. இன்று கும்பாபிஷேகத்தை முன்னிட்டு அதிகாலை கோவில் நடை திறக்கப்பட்டு சுவாமி அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன.
தொடர்ந்து காலை 9 மணிக்கு வைணவ வழி பாட்டு முறைப்படி வைஷ்ணவ வேத ஆகமங்க ளும், திருப்பல்லாண்டு ஓத பட்டாச்சாரியார்கள் கோவில் கோபுர கலசங்க ளில் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகத்தை நடத்தினர். அப்போது அங்கு திரண்டிருந்த பெண் கள் உள்பட ஏராளமானோர் கோவிந்தா... கோபாலா... என பக்தி பரவசத்துடன் தரிசனம் செய்தனர்.
இதேபோல் மூலவர் சன்னதி விமானம், ராஜ கோபுரம், ஆண்டாள் தாயார் சன்னதி விமானத்திலும் கும்பாபிஷே கம் நடந்தது. தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
கும்பாபிஷேக ஏற்பாடு களை கோவில் அதிகாரி சக்கரை அம்மாள் மற்றும் ஊழியர்கள் செய்திருந்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்