search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சீலைக்காரி அம்மன் கோவில் கும்பாபிஷேகம்
    X

    சீலைக்காரி அம்மன் கோவில் கும்பாபிஷேகம்

    • அலங்காநல்லூர் அருகே சீலைக்காரி அம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது.
    • பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

    அலங்காநல்லூர்

    மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே உள்ள தனிச்சியம் கிராமத்தில் அமைந்துள்ள சீலைக்காரி அம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது. 4 நாட்கள் நடந்த யாகசாலை பூஜையில் 4 கால சிறப்பு ஹோமங்கள் நடந்தன. மூலமந்திர ஹோமம், கோ பூஜை, மகா கணபதி ஹோமம், பூர்ணாகுதி, தீபாராதனை நடந்தது. பட்டாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க, யாகசாலையில் இருந்து கடம் புறப்பாடானது. புனித நீர் கோவிலை சுற்றி வலம் வந்து பின்னர் கோபுர உச்சிக்கு கொண்டு செல்லப்பட்டு கலசங்களில் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடந்தது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை பூசாரி ஜெயசீலன் மற்றும் கோவில் பங்காளிகள், கிராம மக்கள் செய்தனர்.

    Next Story
    ×