search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    2 மூதாட்டிகளிடம் நகை பறிப்பு
    X

    2 மூதாட்டிகளிடம் நகை பறிப்பு

    • 2 மூதாட்டிகளிடம் நகை பறிப்பு சம்பவம் நடந்தது.
    • மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

    மதுரை

    அவனியாபுரம், முத்துக்குமார் தெருவை சேர்ந்தவர் கனகவள்ளி (65). இவர் சித்திரை திருவிழா எதிர்சேவை பார்ப்பதற்காக ரிசர்வ் லைன் மாரியம்மன் கோவில் அருகே நின்று கொண்டிருந்தார். அங்கு வந்த ஒரு கும்பல் கனகவள்ளி அணிந்திருந்த 2 பவுன் நகையை பறித்து கொண்டு தப்பியது. இதுகுறித்த புகாரின் பேரில் தல்லாகுளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    பரவை பவர் ஹவுஸ் சாலை ஆர்.ஜே.டி. நகரை சேர்ந்தவர் சுந்தரி (60). இவர் கணவருடன் மோட்டார் சைக்கிளில் சென்றார். விளாங்குடி கொண்டை மாரியம்மன் கோவில் அருகே ஒரு மோட்டார் சைக்கிள் பின் தொடர்ந்தது. அதில் 2 பேர் இருந்தனர். அந்த கும்பல் சுந்தரி அணிந்திருந்த 12 பவுன் நகையை பறித்து கொண்டு தப்பியது. இதுகுறித்த புகாரின் பேரில் கூடல்புதூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து நகை பறித்த மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

    Next Story
    ×