search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கொட்டி தீர்த்த மழையால் வீடுகளை வெள்ளம் சூழ்ந்தது
    X

    போடிநாயக்கன்பட்டியில் வீடுகளில் மழைநீர் சூழ்ந்தது.

    கொட்டி தீர்த்த மழையால் வீடுகளை வெள்ளம் சூழ்ந்தது

    • வாடிப்பட்டி பகுதியில் கொட்டி தீர்த்த மழையால் வீடுகளை வெள்ளம் சூழ்ந்தது.
    • இதனால் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி விளையாட்டு மைதானம் முழுவதும் தண்ணீர் தேங்கியது.

    வாடிப்பட்டி

    மதுரை மாவட்டம் வாடிப்பட்டி பகுதியில் நேற்று இரவு 9 மணி முதல் 10 மணி வரை பலத்த மழை கொட்டி தீர்த்தது. அதன்பின் விடிய, விடிய தூறல் மழை பெய்து கொண்டே இருந்தது.

    இந்த மழையின் போது குலசேகரன் கோட்டை மூப்பர் தெருவை சேர்ந்த மருதான் மகன் சின்னகாளை (60) விவசாயக் கூலி. அவரது மனைவி சின்னம்மாள் (55) ஆகியோர் ஓட்டு வீட்டில் தூங்கிக்கொண்டிருந்தனர்.திடீரென்று வீட்டில் ஒரு பகுதியில் இருந்த கரம்பை மண்ணால் கட்டப்பட்டிருந்த சுவர் சட, சட என்ற சத்தத்துடன் இடிந்து விழுந்தது.

    சத்தம் கேட்டு கணவன்- மனைவி அலறி அடித்துக் கொண்டு வெளியே ஓடி வந்தனர். அந்த சுவர் வீட்டின் உள்பகுதியில் விழாமல் தெருவில் விழுந்ததால் உயிர் சேதம் ஏற்படவில்லை. அந்த சந்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 2 சைக்கிள்கள் சேதம் அடைந்தன.

    அதேபோல் சிறுமலை காட்டாற்று வெள்ளம் ஆதான் ஒடை வழியாக சென்றது. இதனால் அரசுஆண்கள் மேல்நிலைப்பள்ளி விளையாட்டு மைதானம் முழுவதும் தண்ணீர் தேங்கியது.

    தாதம்பட்டி மந்தையில் உள்ள ஒட்டான் குளம் நிரம்பி வழிந்தது. நீரேத்தான் நவநீத பெருமாள் கோவில், வருவாய் ஆய்வாளர் அலுவலக பகுதி மற்றும் தாழ்வாக உள்ள வீடுகளுக்குள்ளும் மழை நீர் புகுந்தது. மின்வாரிய அலுவலகம் நுழைவாயில் பகுதியில் இருந்த பள்ளத்தில் தண்ணீர் தேங்கியது.

    தற்போது விவசாயம் செய்யப்பட்ட வயல்களில் நெற்பயிர்கள் பால் பிடிக்கும் பருவத்தில் உள்ளதால் தேங்கிய மழைநீர் வெட்டிவிடப்பட்டும், இந்த பகுதியில் உள்ள மழை நீர் எல்லாம் துருத்தி ஓடை வழியாக வடகரை கண்மாய் சென்றது.

    பல இடங்களில் மர கொப்புகள் முறிந்து விழுந்து மின்தடை ஏற்பட்டது. தகவல் அறிந்த மின்வாரிய பணியாளர்கள் உடனடியாக கொப்புகளை அகற்றி மின்சாரத்தை சீரமைத்தனர்.

    Next Story
    ×