என் மலர்
உள்ளூர் செய்திகள்

போலி ஆவணம் தயார் செய்து பெண்ணிடம் நிலம் மோசடி
- மதுரையில் போலி ஆவணம் தயார் செய்து பெண்ணிடம் நிலம் மோசடி செய்தனர்.
- இதுதொடர்பாக கணவன்-மனைவி உள்பட 8 பேர் மீது வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மதுரை
கர்நாடக மாநிலம் பெங்களூரு, சி.வி. ராமன் நகரை சேர்ந்தவர் ராஜசேகரன். இவரது மனைவி சாந்தி ஷீலா. இவர் மதுரை மாவட்ட நில அபகரிப்பு தடுப்பு பிரிவு போலீசில் கொடுத்துள்ள புகார் மனுவில் கூறியிருப்பதாவது:-
நாகமலை புதுக்கோட்டை யில் எனது கணவர் ராஜசேகரன் மற்றும் சென்னை கொளத்துரை சேர்ந்த அவரது சகோதரர் ராதாகிருஷ்ணன் ஆகிய 2 பேருக்கும் 11 சென்ட் மனை மற்றும் வீடு உள்ளது.
இந்த நிலையில் ராதாகிருஷ்ணன், அவரது மகன் ஸ்ரீதர் ஆகியோர் திருப்பரங்குன்றம் பத்திர எழுத்தர் மாரியப்பன் என்பவர் மூலம், போலி ஆவணம் தயார் செய்துள்ளனர். அதற்கான விற்பனை உரிமை, திருப்பரங்குன்றம் பாலாஜி நகரை சேர்ந்த பழனிகுமார் என்பவருக்கு தரப்பட்டு உள்ளது.
இதனைத்தொடர்ந்து அவர்கள் மேலபொ ன்னகரம், சண்முகானந்தா புரத்தை சேர்ந்த தனியார் நிறுவன உரிமையாளர் இளங்கோ பாக்யராஜ் என்பவருக்கு அந்த நிலத்தை விற்றுள்ளனர். இதற்கு நாகமலை புதுக்கோட்டையை சேர்ந்த சிவபாண்டி என்பவர் சாட்சி கையெழுத்து போட்டுள்ளார். இது தொடர்பாக போலீசார் உரிய விசாரணை நடத்தி நிலத்தை மீட்டு தர வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.
இதன் அடிப்படையில் மதுரை மாவட்ட நில அபகரிப்பு தடுப்பு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து, போலி ஆவணம் தயார் செய்து நில மோசடியில் ஈடுபட்டதாக, சென்னை கொளத்தூர், காவேரி நகரை சேர்ந்த ராதாகிருஷ்ணன், அவரது மனைவி சாந்தி, இவர்களது மகன் ஸ்ரீதர், திருப்பரங்குன்றம் பாலாஜி நகர் பழனிகுமார், நாகமலை புதுக்கோட்டை சிவபாண்டி, திருப்பரங்குன்றம் பத்திர எழுத்தர் மாரியப்பன், நாகமலை புதுக்கோட்டை ஆதிமூலம், இளங்கோ பாக்யராஜ் ஆகிய 8 பேர் மீது வழக்குப்பதிவு செய்து, அவர்களிடம் இது தொடர்பாக தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.






