search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மறைந்த சிறை காவலர் குடும்பத்திற்கு நிதியுதவி
    X

    மறைந்த சிறை காவலர் குடும்பத்திற்கு நிதியுதவி

    • மறைந்த சிறை காவலர் குடும்பத்திற்கு நிதியுதவியை மதுரை மத்திய சிறை காவலர்கள் வழங்கினர்.
    • மதுரை மத்திய சிறையில் நர்சரி கார்டன் புதுப்பிக்கப்பட்டது.

    மதுரை

    மதுரை மத்திய சிறையில் மதுரை சரக சிறைத்துறை டி.ஐ.ஜி. பழனி ஆய்வு செய்தார். இறுதி நாளான நேற்று காவலர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்ட அவர் குடியரசு தலைவர் பதக்கம் பெற்ற மதுரை மத்திய சிறையை சேர்ந்த உதவி சிறை அலுவலர் பாலமுரு கன், வெற்றிச்செல்வம் மற்றும் அண்ணா பதக்கம் பெற்ற முதல் தலைமை காவலர் சித்ராதேவி ஆகி யோருக்கு சிறைத்துறை தலைமை இயக்குநரின் பாராட்டு சான்றிதழை வழங்கி பாராட்டினார்.

    திருச்சி மத்திய சிறையில் பணிபுரிந்து சமீபத்தில் மறைந்த சிறை காவலர் சம்பத் குடும்பத்தினருக்கு மதுரை சிறை காவலர்கள் சார்பாக ரூ.1 லட்சத்து 35 ஆயிரம் நிதி உதவியை டி.ஐ.ஜி. பழனி வழங்கினார்.

    மேலும் மதுரை மத்திய சிறையில் நர்சரி கார்டன் புதுப்பிக்கப்பட்டது. இதனை நடிகர் காளையன் திறந்து வைத்தார். இதில் மதுரை மத்திய சிறை கண்காணிப்பா ளர் பரசுராம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×