search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருப்பரங்குன்றம் கோவிலில் மலைமேல் குமரருக்கு வேல் எடுக்கும் திருவிழா
    X

    திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோவில் மூலஸ்தானத்தில் இருந்து பல்லக்கில் வைத்து வேல் மலை மீது எடுத்துச்செல்லப்பட்ட காட்சி.

    திருப்பரங்குன்றம் கோவிலில் மலைமேல் குமரருக்கு வேல் எடுக்கும் திருவிழா

    • திருப்பரங்குன்றம் கோவிலில் மலைமேல் குமரருக்கு வேல் எடுக்கும் திருவிழா நடந்தது.
    • அனைவருக்கும் கதம்ப சாதம் பிரசாதமாக வழங்கப்பட்டது.

    திருப்பரங்குன்றம்

    தமிழ்க்கடவுள் முருகப் பெருமானின் ஆறுபடை வீடுகளுள் முதல்படை வீடாக போற்றப்படும் திருப்பரங்குன்றம் சுப்பிர மணிய சுவாமி கோவிலில் ஆண்டு முழுவதும் பல்வேறு திருவிழாக்கள், உற்சவங்கள் நடைபெற்று வருகிறது. இதில் உள்ளூர் மற்றும் வெளியூர் பக்தர்கள் ஏரா ளமானோர் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்து வருகிறார்கள்.

    குறிப்பாக வைகாசி விசா கத் திருவிழா, கந்தசஷ்டி விழா, பங்குனி திருவிழா உள்ளிட்ட திருவிழாக்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் திரளுவார்கள். இதில் மலை மேல் வேல் எடுக்கும் திரு விழா மிகவும் விமரிசையாக கொண்டாடப்படும்.

    அதாவது கிராம மக்கள் சார்பில் விவசாயம் செழிக்க வேண்டியும், நக்கீரர் சாப விமோசனத்தை நினைவு கூறும் வகையிலும் கொண் டாடப்படும் திருவிழாவா கும். ஒவ்வொரு புரட்டாசி மாதம் கடைசி வெள்ளிக்கி ழமை மலை மேல் குமரருக்கு வேல் எடுக்கும் விழா நடை பெறும். இந்த ஆண்டுக்கான திருவிழா இன்று நடைபெற் றது.

    இதற்காக திருப்பரங்குன் றம் கோவில் மூலஸ்தானத் தில் சுப்பிரமணிய சுவாமி திருக்கரத்தில் உள்ள தங்க வேலுக்கு மூலஸ்தானத்தில் சிறப்பு அபிஷேகம் செய்யப் பட்டு, அலங்கரித்து பல்லக் கில் வைத்து நகரின் முக்கிய வீதிகள் வழியாக திருவீதி உலா நிகழ்ச்சி நடைபெற்றது. தொடர்ந்து வேல் மலை மேல் உள்ள காசி விஸ்வநா தர் கோவிலில் உள்ள காசி விஸ்வநாதர் தீர்த்தத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.

    அங்கு வேலுக்கு பால், சந்தனம் உள்ளிட்ட சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற் றது. தொடர்ந்து அங்குள்ள குமரருக்கு சுப்பிரமணிய சுவாமியின் தங்கவேல் சாற்றப்பட்டு சிறப்பு பூஜை கள் செய்யப்பட்டது. இதில் திருப்பரங்குன்றம் மற்றும் சுற்றியுள்ள கிராமப் பகுதி யில் சேர்ந்த பொது மக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். தொடர்ந்து பக்தர்கள் அனைவருக்கும் கதம்ப சாதம் பிரசாதமாக வழங்கப்பட்டது.

    இதனையடுத்து மலைக்கு கீழ் உள்ள பழனியாண்டவர் சன்னதிக்கு வேல் கொண்டு வரப்பட்டு, அங்கு பழனி யாண்டவருக்கு சிறப்பு அபி ஷே கங்கள், அலங்காரங் கள் நடைபெற்று, சிறப்பு தீப தூப ஆராதனைகள் நடை பெறும். மாலை வரை வேல் பழனி ஆண்டவர் திருக்க ரத்தில் இருக்கும்.

    இரவு 7 மணியளவில் பூப்பல்லக்கு அலங்காரத்தில் அந்த வேல், பழனியாண்டவர் கோவிலில் இருந்து புறப் பாடாகி, திருப்பரங்குன்றம் கோவிலை வந்தடையும். விழா ஏற்பாடுகளை கோவில் துணை ஆணையர் சுரேஷ் மற்றும் கிராம பொதுமக்கள் செய்திருந்த னர்.

    Next Story
    ×