search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கிணற்றில் தவறி விழுந்து மூதாட்டி பலி
    X

    கிணற்றில் தவறி விழுந்து மூதாட்டி பலி

    • அலங்காநல்லூர் அருகே கிணற்றில் தவறி விழுந்து மூதாட்டி பலியானார்.
    • அலங்காநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    அலங்காநல்லூர்

    அலங்காநல்லூர் அருகே உள்ள பொதும்பு, வசந்தம் அவென்யூவை சேர்ந்தவர் முருகவேல் (65). இவரது மனைவி தமிழ்செல்வி (60).

    இவர் 4 ஆண்டுகளாக மனநிலை பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். நேற்று முன்தினம் வீட்டில் இருந்த தமிழ்ச்செல்வி மாயமானார்.

    பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. வீட்டின் அருகே உள்ள உபயோகமில்லாத கிணற்றில் பார்த்தபோது தமிழ்செல்வி பிணமாக மிதந்தார். அவர் கிணற்றில் தவறி விழுந்து இறந்திருக்கலாம் என்று தெரிகிறது.

    அலங்காநல்லூர் தீயணைப்பு துறையினர் உடலை மீட்டு மதுரை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

    இதுகுறித்து அலங்காநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    Next Story
    ×