search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சமத்துவ சமுதாய திருமண விழா
    X

    சமத்துவ சமுதாய திருமண விழா

    • சமத்துவ சமுதாய திருமண விழாவில் பொதுமக்கள் உற்சாகமாக பங்கேற்க வேண்டும் என திண்டுக்கல் சீனிவாசன் பேட்டியளித்தார்.
    • அதிகாலை 4 மணி அளவில் யாகசாலை பூஜை நடந்தது.

    மதுரை

    ஜெயலலிதா பேரவையின் சார்பில் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் ஏற்பாட்டில், வருகிற பிப்ரவரி 23-ந் தேதி, டி.குன்னத்தூரில் உள்ள அம்மா கோவில் 51 ஏழை, எளிய மணமக்களின் சமத்துவ சமுதாய திரும ணத்தை முன்னாள் முதலமைச்சரும், அ.தி.மு.க. இடைக்கால பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி நடத்தி வைக்கிறார்.

    இந்த திருமணத்திற்கான முகூர்த்தக்கால் நடும் பணி டி.குன்னத்தூரில் உள்ள அம்மா கோவிலில் நடந்தது. முன்னதாக அதிகாலை 4 மணி அளவில் யாகசாலை பூஜை நடந்தது. அதனைத் தொடர்ந்து ஆர்.பி.உதயகுமார் ஏற்பாட்டில் காலை 10 மணி அளவில் முன்னாள் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், நத்தம் விசுவநாதன் ஆகியோர் முகூர்த்தக்கால் நட்டனர்.

    இந்த நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர்கள் செல்லூர் ராஜூ, கே.டி.ராஜேந்திர பாலாஜி, இசக்கி சுப்பையா, ராஜலட்சுமி, அமைப்புச் செயலாளர்கள் கருப்பசாமி பாண்டியன், வி.வி.ராஜன் செல்லப்பா, சின்னதுரை, சுதா பரமசிவம், மாவட்ட செயலாளர்கள் எஸ்.பி.சண்முகநாதன், குட்டியப்பா எம்.எல்.ஏ., செந்தில்நாதன் எம்.எல்.ஏ, எம்.ஏ.முனியசாமி, ரவிச்சந்திரன், மதுரை மண்டல தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் வி.வி.ஆர்.ராஜ்சத்யன்.

    மகளிர் இணைச் செயலாளர் கீர்த்திகா முனியசாமி, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பார்த்திபன், சட்டமன்ற உறுப்பினர் பெரிய புள்ளான், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் எஸ்.எஸ்.சரவணன், நீதிபதி, தமிழரசன், மாநில பேரவை நிர்வாகிகள் இளங்கோவன், சதன் பிரபாகரன், வெற்றிவேல், சினிமா தயாரிப்பாளர் ஜி.என்.அன்புசெழியன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    பின்னர் திண்டுக்கல் சீனிவாசன் கூறியதாவது:-

    எல்லோரும் சமம் என்பதன் அடிப்படையில், தனது மகள் திருமணத்தை ஆர்.பி. உதயகுமார் ஏழை-எளிய மணமக்களுடன் சேர்த்து நடத்துகிறார். இந்த திருமணத்தை முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நடத்தி வைக்கிறார்.

    ஏற்கனவே அம்மா பேரவையின் சார்பில் 80 திருமணங்கள் நடந்தன.அதனைத் தொடர்ந்து 120 திருமணங்கள் நடை பெற்றன. தற்போது நடைபெறும் திருமணம் சமத்துவ சமுதாய திருமணமாகும். முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மீண்டும் தமிழகத்தின் முதலமைச்சராக வருவார்.

    அதற்கு முன்னதாக இந்த திருமணவிழா ஒரு முத்தாய்ப்பாக அமையும். இந்த திருமணத்தில் பொது மக்கள் அனைவரும் உற்சா கமாக கலந்து கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×