search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருமங்கலத்தில் தி.மு.க. ஆலோசனை கூட்டம்
    X

    திருமங்கலத்தில் தி.மு.க. ஆலோசனை கூட்டம்

    • திருமங்கலத்தில் தி.மு.க. ஆலோசனை கூட்டம் நடந்தது.
    • பாராளுமன்ற தேர்தலில் வெற்றி பெற கட்சியினர் முழுவீச்சில் பாடுபடவேண்டும் என்று மாவட்ட செயலாளர் பேசினார்.

    திருமங்கலம்

    மதுரை தெற்குமாவட்ட தி.மு.க. நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டம் திருமங்கலம் அடுத்துள்ள முத்தப்பன்பட்டியில் நடைபெற்றது. தெற்கு மாவட்ட அவைத்தலைவர் நாகராஜன் தலைமை வகித்தார். மதுரை புறநகர் தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் மணிமாறன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசிய தாவது:-

    வருகிற நாடாளுமன்ற தேர்தலில் தி.மு.க. தலைமையிலான கூட்டணி 40 தொகுதிகளிலும் வெற்றி பெறவேண்டும். கடந்த எம்.பி. தேர்தலின் போது நாம் எதிர்க்கட்சியாக இருந்த போதே தமிழகம் மற்றும் புதுவையை சேர்ந்த 39 தொகுதிகளில்வெற்றி பெற்றோம். தற்போது தமிழகத்தில் ஆளுங்கட்சி யாக உள்ளோம். எனவே 40 தொகுதிகளிலும் வெற்றி பெற்று அசைக்கமுடியாத சக்தியாக திகழவேண்டும்.

    இந்த முறை நாடா ளுமன்ற தேர்தலில் திருமங்கலம் உள்ளிட்ட இந்த மூன்று தொகுதி களிலும் 50 ஆயிரத்திற்கு அதிகமான வாக்குகளை கூடுதலாக பெற்று நாம் வெற்றி பெறவேண்டும். தமிழகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் நல்லாட்சிக்கு சான்றாக நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் வரவேண்டும். எனவே வரும் தேர்தல் நமக்கு முக்கியமான தேர்த லாகும். கட்சியினர் முழுவீச்சில் பாடுபட்டு நமது வெற்றிக்கு உழைக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இந்த கூட்டத்தில் உசிலம்பட்டி தொகுதி பார்வையாளர் மாரியப்பன் கென்னடி, தலைமை செயற்குழு உறுப்பினர்கள் ஏர்போர்ட் பாண்டியன், இளமகிழன், துணை செயலாளர் லதா அதிய மான், ஒன்றிய செய லாளர்கள் தனபாண்டியன், ஆலம்பட்டிசண்முகம், ராமமூர்த்தி, மதன்குமார், நாகராஜன், திருமங்கலம் நகரசெயலாளர் ஸ்ரீதர், பேரூர் செயலாளர் வருசை முகமது, அணி அமைப்பா ளர்கள் மாணவரணி பாண்டி முருகன், இளை ஞரணி விமல், மீனவரணி செல்வம், சுற்றுசூழல்அணி செல்வேந்திரன், விவசாய அணி வில்லூர் ஞான சேகரன், திருமங்கலம் நகராட்சி துணைத்தலைவர் ஆதவன்அதியமான் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×