search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மாவட்ட அளவிலான செஸ் போட்டி
    X

    மாவட்ட அளவிலான செஸ் போட்டி

    • மாவட்ட அளவிலான செஸ் போட்டி நடந்தது.
    • காவல் கண்காணிப்பாளர் நல்லு, எழுமலை ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் விஸ்வநாதன் உள்ளிட்டோர் போட்டியை தொடங்கி வைத்தனர்.

    உசிலம்பட்டி

    உசிலம்பட்டி அருகே உள்ள எழுமலையில் மாவட்ட அளவிலான செஸ் போட்டி நடந்தது. காவல் கண்காணிப்பாளர் நல்லு, எழுமலை ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் விஸ்வநாதன் உள்ளிட்டோர் போட்டியை தொடங்கி வைத்தனர்.

    11, 14 மற்றும் 17 வயதினருக்கான போட்டி மற்றும் 17 வயதிற்கு மேற்பட்டோருக்கான போட்டி என 4 பிரிவுகளாக நடந்த போட்டியில் உசிலம்பட்டி, எழுமலை, பேரையூர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள 30-க்கும் அதிகமான பள்ளிகளை சேர்ந்த நூற்றுக்கணக்கான மாணவ-மாணவிகளும், 50-க்கும் மேற்பட்ட 17 வயதிற்கு மேற்பட்டோரும் கலந்து கொண்டனர்.

    போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ் மற்றும் பரிசு கோப்பையை உசிலம்பட்டி காவல் துணைக் கண்காணிப்பாளர் நல்லு, டாக்டர் விஸ்வநாதன் ஆகியோர் வழங்கினர்.

    Next Story
    ×