search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சொத்து மதிப்பை  குறைத்து பத்திரப்பதிவு
    X

    சொத்து மதிப்பை குறைத்து பத்திரப்பதிவு

    • திருமங்கலத்தில் சொத்து மதிப்பை குறைத்து பத்திரப்பதிவு போலீஸ் ஐ.ஜி.யிடம் புகார் செய்யப்பட்டது.
    • குறைத்து மதிப்பீடு செய்து பத்திரப்பதிவு செய்து உள்ளனர்.

    மதுரை

    தென் மண்டல போலீஸ் ஐ.ஜி அஸ்ரா கார்க்கிடம் திருமங்கலத்தைச் சேர்ந்த வக்கீல் வினோத்குமார் என்பவர் புகார் மனு கொடுத்தார். அதில் திருமங்கலத்தைச் சேர்ந்த சிலர் அங்குள்ள சார்பதிவாளர் அலுவ லகத்தில் ரூ.4 கோடி மதிப்புள்ள நிலத்தை ரூ.40 லட்சம் என்று குறைத்து மதிப்பீடு செய்து பத்திரப்பதிவு செய்து உள்ளனர்.

    இதனால் பத்திரப்பதிவு மற்றும் வருமான வரித்துறைக்கு இழப்பு ஏற்பட்டு உள்ளது. இது குறித்து புகார் மனு அனுப்பினேன். அவர்கள் என் மீது ரூ.20 கோடி மோசடியாக பத்திரப்பதிவு செய்ததாக புகார் கூறி வருகின்றனர்.

    திருமங்கலம் சார்பதி வாளர் அலுவலகத்தில் மோசடியாக பதிவு செய்தவர்களின் பத்திரத்தை ரத்து செய்ய வேண்டும். என் மீது பொய் புகார் கொடுத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறப்பட்டு உள்ளது.

    Next Story
    ×