search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தலைமை ஆசிரியருக்கு பாராட்டு
    X

    தலைமை ஆசிரியருக்கு பாராட்டு

    • வாடிப்பட்டி அருகே பள்ளி தலைமை தலைமை ஆசிரியருக்கு பாராட்டு விழா நடந்தது.
    • முடிவில் ஆர்.சி. அமலி தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் நன்றி கூறினார்.


    வாடிப்பட்டி


    மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே பாண்டியராஜபுரம் சி.எஸ்.ஐ. பள்ளி தலைமை ஆசிரியர் ராபின்சன் செல்வகுமாருக்குவாடிப்பட்டி ஒன்றிய அனைத்து உதவி பெறும் பள்ளிகள் சார்பாக பாராட்டு விழா நடந்தது. இந்த விழாவிற்கு சோழவந்தான் எபினேசர் துரை ராஜ் தலைமை தாங்கினார். கென்னடி முன்னிலை வகித்தார். தலைமையாசிரியர் கிறிஸ்டோபர் ஜெயக்குமார் வரவேற்றார்.


    இந்த விழாவில் வட்டாரக்கல்வி அலுவலர்கள் ஷாஜகான், அகிலத்து இளவரசி, ஜெயசித்ரா, ராணி குணசீலி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள். வாடிப்பட்டி அனைத்து உதவி பெறும் பள்ளிகள்சார்பாக தலைமையாசிரியர் ராபின்சன்செல்வகுமாருக்கு நினைவு பரிசு வழங்கப்பட்டது. முடிவில் ஆர்.சி. அமலி தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் ஸ்டாலின் நன்றி கூறினார்.


    Next Story
    ×