search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஊழியர் வீட்டில் கொள்ளை
    X

    ஊழியர் வீட்டில் கொள்ளை

    • அரசு ஆஸ்பத்திரி ஊழியர் வீட்டில் கொள்ளை நடந்துள்ளது.
    • முன் கதவு பூட்டை உடைத்து வீட்டுக்குள் புகுந்து, பீரோவில் இருந்த 20 பவுன் பவுன்மற்றும் 83 ஆயிரம் ரூபாய் ரொக்கம் ஆகியவற்றை கொள்ளையடித்து தப்பிச் சென்றனர்.

    மதுரை

    மதுரை தோப்பூர், கண்மணி தெருவை சேர்ந்தவர் கோமதிநாயகம் (வயது55). இவர் மேலஉரப்பனூரில் உள்ள கால்நடை ஆஸ்பத்திரியில், சுகாதார ஆய்வாளராக வேலை பார்த்து வருகிறார். இவர் ராணுவத்தில் இருந்து ஓய்வு பெற்றவர்.

    இந்த நிலையில் கோமதிநாயகம் சம்பவத்தன்று மதியம் வீட்டை பூட்டிவிட்டு, விருதுநகர் மாவட்டத்தில் உள்ள வெம்பக்கோட்டைக்கு புறப்பட்டு சென்றார்.

    அப்போது யாரோ மர்ம நபர்கள் முன் கதவு பூட்டை உடைத்து வீட்டுக்குள் புகுந்து, பீரோவில் இருந்த 20 பவுன் தங்க நகை மற்றும் 83 ஆயிரம் ரூபாய் ரொக்கம் ஆகியவற்றை கொள்ளையடித்து தப்பிச் சென்றனர்.

    இந்த நிலையில் கோமதிநாயகம் நேற்று இரவு வீட்டுக்கு வந்தார். அப்போது வீட்டின் முன் பக்க கதவு உடைந்து கிடப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தார். அவர் வீட்டுக்குள் சென்று பார்த்த போது பீரோவில் இருந்த நகை, பணம் திருடப்பட்டு இருந்தது. இது தொடர்பாக கோமதிநாயகம் ஆஸ்டின்பட்டி போலீசில் புகார் கொடுத்தார். இதன் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.

    Next Story
    ×