search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    விளையாட்டு மைதானம் அமைப்பதற்கு அய்யப்பன் எம்.எல்.ஏ. ஆய்வு
    X

     விளையாட்டு அரங்கம் அமைப்பதற்கான இடத்தை அய்யப்பன் எம்.எல்.ஏ. மற்றும் அதிகாரிகள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

    விளையாட்டு மைதானம் அமைப்பதற்கு அய்யப்பன் எம்.எல்.ஏ. ஆய்வு

    • விளையாட்டு மைதானம் அமைப்பதற்கு அய்யப்பன் எம்.எல்.ஏ. ஆய்வு செய்தார்.
    • 7 ஏக்கர் நிலம் தேர்வு செய்யப்பட்டு ரூ.3 கோடி மதிப்பீட்டில் மைதானம் மற்றும் அரங்கம் அமைய உள்ளது.

    உசிலம்பட்டி

    மதுரை மாவட்டம் உசிலம்பட்டி சட்டமன்ற தொகுதியில் தமிழ்நாடு அரசு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மூலம் விளையாட்டு அரங்கம் அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.

    இதையொட்டி உசிலம்பட்டியை அடுத்த சீமானூத்து கிராமத்தில் உள்ள ஒரு இடத்தை உசிலம்பட்டி எம்.எல்.ஏ. அய்யப்பன், ஊராட்சி மன்ற தலைவர் அஜித் பாண்டி, சென்னை இ.பி.எம்.சி.ஆர். நிர்வாக இயக்குநர் கவின்குமார், பொறி யாளர்கள் வினோத்குமார், சவுமியா சிரபன் மற்றும் குழுவினர்கள் ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் கண்ணன் ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

    இந்த விளையாட்டு மைதானம் அமைப்பதற்கு 7 ஏக்கர் நிலம் தேர்வு செய்யப்பட்டு ரூ.3 கோடி மதிப்பீட்டில் மைதானம் மற்றும் அரங்கம் அமைய உள்ளது.

    இந்த ஆய்வின்போது கீரிப்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் சின்னச்சாமி, கிராம நிர்வாக அலுவலர் சுப்பையா, அ.தி.மு.க ஓ.பி.எஸ் அணி நகரச் செயலாளர் சசிகுமார், ஒன்றிய செயலாளர் ஜான்சன், மாவட்ட தொழில்நுட்ப பிரிவு அணி சிவன் ஆகியோர் உடனிருந் தனர்.

    Next Story
    ×