search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பெண்ணை தொந்தரவு செய்த ஆட்டோ டிரைவர் கைது
    X

    பெண்ணை தொந்தரவு செய்த ஆட்டோ டிரைவர் கைது

    • பெண்ணிடம் செல்போன் நம்பர் கேட்டு தொந்தரவு செய்த ஆட்டோ டிரைவர் கைது செய்யப்பட்டார்.
    • இது குறித்து அந்த பெண் புதூர் போலீசில் புகார் செய்தார்.

    மதுரை

    மதுரை புதுப்பட்டி, சாஸ்திரி நகரைச் சேர்ந்த விக்னேஸ்வரன் மனைவி பிரதீபா (வயது 27). இவர் நேற்று மாலை ஆட்டோவில் புறப்பட்டு சென்றார். அதில் டிரைவர் உள்பட 3 பேர் இருந்தனர்.

    அழகர்கோவில் மெயின் ரோட்டில் ஆட்டோ சென்ற போது, டிரைவர் பிரதீபாவிடம் நைசாக பேச்சு கொடுத்தார். அவர், 'உன் செல்போன் நம்பரை கொடு. அது எனக்கும், உனக்கும் உபயோகமாக இருக்கும்' என்று கேட்டு உள்ளார். இதற்கு பிரதிபா மறுத்தார்.

    ஆத்திரம் அடைந்த 3 பேரும், பிரதீபாவின் கையை பிடித்து இழுத்து அவமரியாதை செய்தனர். இது குறித்து பிரதீபா புதூர் போலீசில் புகார் செய்தார்.

    போலீசார் வழக்குப்பதிவு செய்து இது தொடர்பாக வெள்ளக்கல், மந்தை அம்மன் கோவில் தெரு, ஆட்டோ டிரைவர் பாலமுருகன் (34), கோசாகுளம், பெரியார் நகர் கார்த்திக் (35) ஆகியோரை கைது செய்தனர். தப்பி ஓடிய மேலும் ஒருவரை தேடி வருகின்றனர்.

    Next Story
    ×