என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஆரோக்கிய அன்னை தேவாலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்
    X

    ஆரோக்கிய அன்னை தேவாலயத்தில் சிறப்பு திருப்பலியும், பக்தர்கள் வெள்ளத்தில் கொடியேற்றமும் நடந்தது.

    ஆரோக்கிய அன்னை தேவாலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்

    • ஆரோக்கிய அன்னை தேவாலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
    • திருக்கொடி பங்குதந்தை வளன் தலைமையில் இறக்கப்பட்டு நன்றிதிருப்பலியுடன் விழா நிறைவு பெறுகிறது.

    வாடிப்பட்டி

    தென்னகத்து வேளாங்கன்னி என்று போற்றப்படும் புகழ்வாய்ந்த வாடிப்பட்டி ஆரோக்கிய அன்னை திருத்தலத்தின் திருவிழா நேற்று கொடி யேற்றத்துடன் தொடங்கியது. முதல் நாளான நேற்று மாலை 6.15மணிக்கு மதுரை மறை மாவட்ட பேராயர் அந்தோணிபாப்பு சாமி தலைமையில் அன்னையின் கொடியேற்றமும், சிறப்பு திருப்பலியும் நடந்தது.

    மேலும் இதன் முக்கியவிழாவான வருகிற 8-ந்தேதி (வெள்ளிக்கிழமை) ஆரோக்கிய அன்னையின் பிறப்புப்பெருவிழா, இறைவார்த்தை சபை 148-வது எஸ்.வி.டி. பிறப்பு விழா, அற்புத ஜீவஊற்று இயேசுவின் அருமருந்து 23-வதுஆண்டு பிறப்பு விழா ஆகியவை நடக்கிறது. அன்றுமாலை 5 மணிக்கு நற்கருணை ஆராதனையும், 6 மணிக்கு முப்பெரும் விழா கூட்டுத்திருப்பலியை யும் தர்மபுரி மறைமாவட்ட ஆயர் லாரன்ஸ் பயஸ்துரைராஜ் நடைபெற உள்ளது. இரவு 7மணிக்கு ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொள்ளும் வண்ணவிளக்குகள் மலர்களால் அலங்கரிக்கப்பட்ட அன்னையின் தேர்பவனியும் நடக்கிறது.

    9-ந்தேதி (சனிக்கிழமை) காலை 6.30 ஆரோக்கிய அன்னையின் திருக்கொடி பங்குதந்தை வளன் தலைமையில் இறக்கப்பட்டு நன்றிதிருப்பலியுடன் விழா நிறைவு பெறுகிறது.

    இந்த திருவிழா ஏற்பாடு களை எஸ்.வி.டி.அதிபர் வளன், எஸ்.வி.டி. நிர்வாகி ஆன்றனி வினோ, உதவி பங்குதந்தை அடைக்கலராஜ் அடிகளார் மற்றும் இருபால் துறவியர் அன்பியங்கள் பங்குமக்கள் ஆகியோர் செய்து வருகின்ற னர்.

    இதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை இன்ஸ் பெக்டர் முத்து தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர்கள் முருகே சன், மாயாண்டி, உதயக்குமார், அழகர்சாமி உள்ளிட்ட போலீசார்கள் செய்து வருகின்றனர்.

    Next Story
    ×