search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அமெரிக்கன் கல்லூரி மாணவர்கள் ரத்த தானம்
    X

    அமெரிக்கன் கல்லூரி மாணவர்கள் ரத்த தானம்

    • அமெரிக்கன் கல்லூரியில் 710 மாணவர்கள் ரத்த தானம் செய்து சாதனை புரிந்தனர்.
    • 710 யூனிட் ரத்தம் பெறப்பட்டு மதுரை அரசு மருத்துவமனை ரத்த வங்கிக்கு அனுப்பப்பட்டது.

    மதுரை

    மதுரை அமெரிக்கன் கல்லூரியின் நாட்டு நலப்பணித்திட்ட அணிகள், இந்திய செஞ்சிலுவைக் சங்கம் மற்றும் செஞ்சுருள் சங்கம் சார்பில் ரத்த தான முகாம் நடந்தது. நாட்டு நலப்பணித்திட்ட அணிகள் ஏற்பாடு செய்த இந்த முகாமை கல்லூரி நிதிக்காப்பாளர் பியூலா ரூபி கமலம் தலைமையில், காமராஜர் பல்கலைக்கழக பதிவாளர் (பொறுப்பு) சிவக்குமார் ெதாடங்கி வைத்தார். காமராஜர் பல்கலைக்கழக நாட்டு நலப்பணித்திட்ட ஒருங்கிணைப்பாளர் கண்ணன் முன்னிலை வகித்தார். கல்லூரியின் சிற்றாலய குரு பேராசிரியர் ஜான் காமராஜ் இறைவேண்டல் முன்வைத்தார்.

    இதில் மதுரை அரசு மருத்துவமனை ரத்த வங்கியைச் சேர்ந்த மருத்துவர்களான ஆனந்தீஸ்வரி, ராஜேசுவரி மற்றும் அனைத்து துறைப் பேராசிரியர்களும் கலந்து கொண்டனர். இந்த முகாமில் அமெரிக்கன் கல்லூரி மாணவர்களிடம் இருந்து 710 யூனிட் ரத்தம் பெறப்பட்டு மதுரை அரசு மருத்துவமனை ரத்த வங்கிக்கு அனுப்பப்பட்டது. ரத்த தானம் செய்த மாணவர்களை கல்லூரி முதல்வர் தவமணி கிறிஸ்டோபர் பாராட்டினார். இதற்கான ஏற்பாடுகளை திட்ட ஒருங்கிணைப்பாளர் மீனாட்சி சுந்தரம் ஒருங்கிணைப்பில் திட்ட அலுவலர்கள் மற்றும் பேராசிரியர்களான சாகுல் ஹமீது, ஷீலா, டாப்னி, மங்கையர்க்கரசி, யேசுராஜன், பழனிச்சாமி, ஞானமணி, விக்னேசுவரன், ஜோசைய்யா ஆகியோர் செய்திருந்தனர்.

    Next Story
    ×