என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
வாலிபரை கொலை செய்து பிணம் கிணற்றில் வீச்சு
- வாலிபரை கொலை செய்து பிணம் கிணற்றில் வீசியுள்ளனர்.
- மது போதையில் தவறி உள்ளே விழுந்து இறந்தாரா? காயங்கள் எதுவும் இன்றி விஷம் கலந்து கொலை செய்து கிணற்றுக் குள் தூக்கி வீசப்பட்டாரா?
வாடிப்பட்டி
மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே நீரேத் தான் புது கண்மாய் சாலையில் உள்ள ஒரு கிணற்றில் பேண்ட் சட்டை அணிந்த நிலையில் ஆண் பிணம் ஒன்று மிதப்பதாக கிராம நிர்வாக அலுவலர் முகிலனுக்கு தகவல் கிடைத்தது. அவர் இது குறித்து வாடிப்பட்டி போலீஸ் மற்றும் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரி வித்தார்.
அதன்படி சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறை நிலை அதிகாரி சதக்கத்துல்லா தலைமையில் தீயணைப்பு வீரர்கள் கிணற்றுக்குள் குதித்து அழுகிய நிலையில் கிடந்த 50 வயது மதிக்கத்தக்க ஆண் பிணத்தை மீட்டனர்.
அதன்பின் வாடிப்பட்டி போலீஸ் சப்- இன்ஸ் பெக்டர்கள் முரு கேசன், மாயாண்டி ஆகியோர் பிணத்தை கைப்பற்றி பிரத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
பிணமாக கிடந்தவர் கிரே கலர் பேண்டும், புளூ கலரில் வெள்ளை புள்ளி போட்ட முழுக்கை சட்டை யும் அணிந்திருந்தார். உடலில் ரத்த காயங்கள் எதுவும் இல்லை. முகம் முழுவதும் உப்பிய நிலையில் காணப்பட்டது.அவர் யார்? எந்த ஊர் என்ற விவரம் தெரியவில்லை. கிணற்றை சுற்றி உள்ள பகுதியில் பேக், செல்போன் தவிர வேறு எதுவும் கிடைக்கவில்லை. மது போதையில் தவறி உள்ளே விழுந்து இறந்தாரா? அல்லது காயங்கள் எதுவும் இன்றி விஷம் கலந்து கொலை செய்து கிணற்றுக் குள் தூக்கி வீசப்பட்டாரா? உள்ளிட்ட கோணங்களில் வாடிப்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) முத்துமணி விசாரித்து வருகிறார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்