search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மீனாட்சி அம்மன் கோவிலில் சுவாமி-அம்பாளுக்கு 4 கால சிறப்பு பூஜை
    X

    மகாசிவராத்திரியை முன்னிட்டு மதுரை இம்மையிலும் நன்மை தருவார் கோவிலில் 1008 சங்காபிஷேக வழிபாடு நடந்தது. 

    மீனாட்சி அம்மன் கோவிலில் சுவாமி-அம்பாளுக்கு 4 கால சிறப்பு பூஜை

    • மீனாட்சி அம்மன் கோவிலில் சுவாமி-அம்பாளுக்கு 4 கால சிறப்பு பூஜை நடக்கிறது.
    • இம்மையிலும் நன்மை தருவார் கோவிலில் 1008 சங்காபிஷேக வழிபாடு நடந்தது.

    மதுரை

    மதுரை மீனாட்சி அம்மன் கோவில் மகா சிவராத்திரி விழா வருடந்தோறும் விமரி சையாக கொண்டாடப்படும். அதன்படி சிவராத்திரியான இன்று அதிகாலை கோவில் நடை திறக்கப்பட்டு சொக்கநாதர்-மீனாட்சி அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தன.

    இன்று மாலை 4 மணிக்கு சுந்தரேஸ்வரர் சன்னதி முன்பு 1008 சங்காபிஷேகமும், மீனாட்சி அம்மன் சன்னதியில் 108 சங்காபிஷேக வழிபாடும் நடக்கிறது. அதன்பின்னர் சனி பிரதோஷ வழிபாட 4.45 மணிக்கு தொடங்குகிறது.

    சிவராத்திரியை முன்னிட்டு இன்று இரவு முழுவதும் கோவில் நடை திறக்கப்பட்டிருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இரவு தொடங்கி அதிகாலை வரை சுவாமி-அம்பாளுக்கு 4 கால பூஜைகள் நடை பெறுகிறது. அதன்படி மீனாட்சி அம்மனுக்கு முதல் கால பூஜை இரவு 10 மணிக்கும், 2ம் கால பூஜை 11 மணிக்கும், 3ம் கால பூஜை 12 மணிக்கும், 4ம் கால பூஜை 1 மணிக்கும் நடக்கிறது.

    இதேபோல் சுவாமிக்கு முதல் கால பூஜை இரவு 11 மணிக்கும், 2ம் கால பூஜை 12 மணிக்கும், 3ம் கால பூஜை 1 மணிக்கும், 4ம் கால பூஜை 2 மணிக்கும் நடக்கிறது. அதிகாலை 3 மணிக்கு அர்த்த ஜாம பூஜையும், 4 மணிக்கு பள்ளியறை பூஜையும், 5 மணிக்கு திருவனந்தல் பூஜையும் நடக்கிறது.

    சிவராத்திரியை முன்னிட்டு சுவாமி-அம்பாளுக்கு விடிய விடிய அபிஷேக ஆராதனை நடைபெறும். அபிஷே கத்திற்கு தேவையான பால், தயிர், இளநீர், பன்னீர், பழ வகைகள், தேன் ஆகியவற்றை ஏராளமான பக்தர்கள் கோவில் அலுவலகத்தில் வழங்கினர்.

    இம்மையிலும் நன்மை தருவார் கோவில்

    இதேபோல் மதுரையில் உள்ள இம்மையிலும் நன்மை தருவார் கோவிலில் சிவராத்திரியை முன்னிட்டு ஸ்தல அர்ச்சகர் தர்மராஜ் சிவம் தலைமையில் 1008 சங்காபிஷேக வழிபாடு நடந்தது.

    சிம்மக்கல் ஆதி சொக்க நாதர் கோவில், செல்லூர் திருவாப்புடையார் கோவில், தெப்பக்குளம் முக்தீஸ்வரர் கோவில், திருவாதவூர் திருமறைநாதர் சுவாமி கோவில் உள்ளிட்ட பல்வேறு சிவ தலங்களில் மகா சிவராத்திரி வழிபாடு இன்று இரவு நடக்கிறது. மேலும் பல்வேறு பகுதிகளில் உள்ள குலதெய்வ கோவில்களிலும் சிறப்பு பூஜைகள் நடந்தன.

    Next Story
    ×