search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கண்காணிப்பு காமிரா திருடிய 2 பேர் கைது
    X

    கைதான வாலிபர்கள்.

    கண்காணிப்பு காமிரா திருடிய 2 பேர் கைது

    • மதுரை ஜவுளி கடையில் கண்காணிப்பு காமிரா திருடிய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
    • நாகமலை புதுக்கோட்டை போலீஸ் நிலையத்தில் பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

    மதுரை

    நாகமலை புதுக்கோட்டை யை சேர்ந்த ராமச்சந்திரன் மனைவி உமா மகேசுவரி (வயது 39). இவர் சின்னக்கண்ணு நகரில் நடத்தி வருகிறார்.

    சம்பவத்தன்று இரவு இவர் கடையை மூடி விட்டுச் சென்றார். மர்ம நபர்கள் கடைக்கு வெளியே பொருத்தப்பட்டு இருந்த 2 கண்காணிப்பு காமிராக்களை திருடிச் சென்று விட்டனர்.

    இதுகுறித்த புகாரின் பேரில் நாகமலை புதுக்கோட்டை போலீசில் புகார் செய்யப்பட்டது. இந்த வழக்கில் குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும் என்று போலீஸ் சூப்பிரண்டு சிவபிரசாத் உத்தரவிட்டார்.

    இதன்படி சமயநல்லூர் டி.எஸ்.பி. பாலசுந்தரம் மேற்பார்வையில், நாகமலை புதுக்கோட்டை இன்ஸ்பெக்டர் சிவக்குமார் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டது.

    அவர்கள் சம்பவ இடத்தில் பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு காமிரா பதிவுகளை கைப்பற்றி ஆய்வு செய்தனர். அதில் நாகமலை புதுக்கோட்டையில் வசிக்கும் 2 பேர் மேற்கண்ட குற்ற சம்பவத்தில் ஈடுபட்டது தெரிய வந்தது.

    இதையடுத்து தனிப்படை போலீசார் நாகமலை புதுக்கோட்டை கதிரேசன் மகன் விக்கி என்ற விக்னேஷ் (22), திருவள்ளுவர் தெரு சங்கர் கணேஷ் (30) ஆகியோரை கைது செய்தனர்.

    விக்னேஷ் மீது நாகமலை புதுக்கோட்டை போலீஸ் நிலையத்தில் பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×