search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பொதுக்கூட்டம்-ஊர்வலம் நடத்த 15 நாட்கள் தடை உத்தரவு
    X

    பொதுக்கூட்டம்-ஊர்வலம் நடத்த 15 நாட்கள் தடை உத்தரவு

    • மதுரையில் பொதுக்கூட்டம், ஊர்வலம் நடத்த 15 நாட்கள் தடை உத்தரவிடப்பட்டுள்ளது.
    • இந்த தடை உத்தரவு 9-ந்தேதி வரை அமலில் இருக்கும்.

    மதுரை

    மதுரையில் வருகிற 9-ந் தேதி வரை 15 நாட்களுக்கு போலீஸ் அனுமதி இன்றி பொதுக்கூட்டம், ஊர்வலம் நடத்த தடை விதிக்கப்பட்டு உள்ளது. இது தொடர்பாக மதுரை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் இருந்து வெளியிடப்பட்ட செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

    தமிழக காவல்துறை சட்டம் 1888 -பிரிவு 41 மற்றும் 41(ஏ)- படி மதுரை மாநகர் பகுதிகளில் பொது,தனியார் இடங்களில் அனுமதி இன்றி கூடுதல், போராட்டத்தில் ஈடுபடுதல், ஆயுதங்களுடன் கூடுதல் மற்றும் பொதுக் கூட்டங்கள், ஊர்வலம் நடத்த வருகிற 15 நாட்களுக்கு தடை விதித்து உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது

    அதன்படி நேற்று(25-ந் தேதி) முதல் அடுத்த மாதம் 9-ந் தேதி வரை 15 நாட்கள் வரை இந்த தடை உத்தரவு அமலில் இருக்கும். எனவே பொதுக்கூட்டம், ஆர்ப்பாட்டம்,ஊர்வலம் நடத்த விரும்புவர்கள் 5 நாட்களுக்கு முன்னதாகவே சம்பந்தப்பட்ட போலீஸ் நிலையங்களில் உரிய அனுமதியை பெற வேண்டும். அனுமதிவேண்டி கடிதம் கொடுக்கப் படும் நிலையில் போலீஸ் அனுமதி வழங்குவது குறித்து முடி வெடுத்து அறிவிக்கப்படும்.

    இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    Next Story
    ×