search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    காரில் கடத்திய 100 கிலோ குட்கா-புகையிலை பறிமுதல்; 3 பேர் கைது
    X

    பறிமுதல் செய்யப்பட்ட குட்கா, புகையிலை பொருட்களுடன் கைதான 3 பேர்.

    காரில் கடத்திய 100 கிலோ குட்கா-புகையிலை பறிமுதல்; 3 பேர் கைது

    • கொட்டாம்பட்டி அருகே காரில் கடத்திய 100 கிலோ குட்கா-புகையிலை பறிமுதல் செய்யப்பட்டது.
    • இந்த கடத்தலில் தொடர்புடைய 3 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

    மேலூர்

    மதுரை மாவட்டம் கொட்டாம்பட்டி பகுதியில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு உத்தரவின் பேரில் தனிப்படை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நாகநாதன் மற்றும் போலீசார் வாகன சோத னையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த காரை மறித்து அதிலிருந்து 3 பேரிடம் விசாரித்த போது முன்னுக்கு பின் முரணாக பதிலளித்தனர்.

    இதனால் சந்தேகமடைந்த போலீசார் காரை சோதனையிட்ட போது அதில் 100 கிலோ குட்கா, புகையிலை பொருட்கள் கடத்துவது தெரிய வந்தது. அதனை பறிமுதல் செய்த போலீசார் 3 பேரையும் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். அங்கு விசாரணை நடத்தியதில் அவர்கள் கீழப்பன ங்காடியைச் சேர்ந்த பாலமுருகன் (36), நெடுங்குளம் முருகன் (42), சொக்கலிங்கபுரம் சாகுல் ஹமீது (43) என தெரியவந்தது.

    3 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

    Next Story
    ×