பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டிற்காக லோன் மேளா- கலெக்டர் தகவல்

லோன் மேளா தொடக்க வேளாண்மை கூட்டுறவுவங்கி, நகர்ப்பபுற கூட்டுறவு வங்கிகளில் வருகிற 15-ந் தேதி வரை நடைபெறும்.விண்ணப்பங்களை பெற்று கடன் வழங்க தொடர்புடைய ஆவணங்களை வங்கிகளில் சமர்ப்பித்து பொருளாதார மேம்பாடு அடைந்து பயன் பெறலாம்.
கலெக்டர் லலிதா.
கலெக்டர் லலிதா.
Published on

தரங்கம்பாடி :

மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் லலிதா வெளியி ட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது:-

மயிலாடுதுறைமாவ ட்டத்தில் பிற்படுத்த ப்பட்டோர், பொருளாதார மேம்பாட்டு கழகத்தின் மூலம் பிற்படுத்தபட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் மற்றும் சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டிற்கான TABSEDCO மற்றும் TAMCO கழக திட்டத்தின் மூலம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி, நகர்ப்பபுற கூட்டுறவு வங்கி மற்றும் மத்திய கூட்டுறவு வங்கி தகுதியின் அடிப்படையில் கடன் வழங்கிட ஏதுவாக லோன் மேளா நடைபெற்று வருகிறது.

லோன் மேளா தொடக்க வேளாண்மை கூட்டுறவுவங்கி, நகர்ப்பபுற கூட்டுறவுவங்கிகளில் வருகிற 15.8.2022 வரை நடைபெறும். மத்திய கூட்டுறவு வங்கியின் மூலம் லோன் மேளா வருகிற 10.8.2022 வரை நடைபெறும்.

மேற்படி கழகம் வழங்கும் கடன் திட்டம் மூலம் பயன் பெற விரும்புவோர்கள் தங்கள் இருப்பிடத்திற்கு அருகில் உள்ள தொடக்க கூட்டுறவு வங்கி, நகர்ப்புற கூட்டுறவு வங்கி மற்றும் மத்திய வேளாண்மை கூட்டுறவு வங்கியின் மூலம் விண்ணப்பங்களை பெற்று கடன் வழங்க தொடர்புடைய ஆவணங்களை வங்கிகளில் சமர்ப்பித்து பொருளாதார மேம்பாடு அடைந்து பயன் பெறலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com