search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    குற்றாலத்தில் மனைவி பிரிந்த ஏக்கத்தில் தொழிலாளி தற்கொலை
    X

    குற்றாலத்தில் மனைவி பிரிந்த ஏக்கத்தில் தொழிலாளி தற்கொலை

    • மாரிமுத்து, முப்புடாதி ஆகியோர் கடந்த 4 வருடங்களாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.
    • மாரிமுத்து காட்டுப்பகுதியில் விஷம் குடித்து மயங்கி கிடந்தார்.

    நெல்லை:

    குற்றாலம் அருகே நன்னகரம் பள்ளிக்கூடத் தெருவை சேர்ந்தவர் மாரிமுத்து (வயது 33). தொழிலாளி. இவரது மனைவி முப்புடாதி. இவர்கள் 2 பேருக்கும் இடையே ஏற்பட்ட குடும்ப பிரச்சினையில் 2 பேரும் கடந்த 4 வருடங்களாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். இதனால் மனவேதனையில் இருந்து வந்த மாரிமுத்து கடந்த 26-ந்தேதி அதிகாலை நன்னகரம்-ஆயிரப்பேரி சாலையில் உள்ள காட்டுப்பகுதியில் விஷம் குடித்து மயங்கி கிடந்தார். இதனை அந்த வழியாக சென்றவர்கள் பார்த்து அவரை மீட்டு தென்காசி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்த நிலையில், நேற்று அவர் இறந்தார்.

    இது குறித்து குற்றாலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×