search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சின்னசேலம்  சாலை விபத்தில் கூலி தொழிலாளி படுகாயம்
    X

    சின்னசேலம் சாலை விபத்தில் கூலி தொழிலாளி படுகாயம்

    கள்ளக்குறிச்சி:

    சேலம் மாவட்டம் இளம்பிள்ளை கிராமத்தைச் சேர்ந்த மாரிமுத்து மகன் சரவணன் (வயது 38) கூலி வேலை செய்து வருகிறார். இவர் சொந்த வேலையின் காரணமாக தனது இருசக்கர வாகனத்தில் சேலத்தில் இருந்து கள்ளக்குறிச்சிக்கு சென்று மீண்டும் சேலம் செல்ல சின்ன சேலம் ஆவின் பாலகம் எதிரே உள்ள சென்னை- சேலம் தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்பொழுது இவருக்கு பின்னால் வந்த லாரி மோதியது.

    இதில் தலையில் பலத்த காயம் அடைந்த சரவணன் 108 ஆம்புலன்ஸ் மூலம் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். இது குறித்து சின்ன சேலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் .

    Next Story
    ×