என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
குரும்பூர் புனித கன்பிரகாசியம்மாள் ஆலய திருவிழா தேர்பவனி
- குரும்பூர் புனித கன்பிரகாசியம்மாள் ஆலய திருவிழா கடந்த 4-ந்தேதி தூத்துக்குடி மறைமாவட்ட ஆயர் ஸ்டீபன் ஆண்டவர் தலைமையில் கொடியேற்றத்துடன் தொடங்கியது.
- தூத்துக்குடி மறைமாவட்ட முதன்மை குரு பன்னீர்செல்வம் அடிகளார் மற்றும் மறைமாவட்ட பங்குத்தந்தை பபிஸ்டன் குருக்கள் கலந்து கொண்டனர்.
குரும்பூர்:
குரும்பூர் புனித கன்பிரகாசியம்மாள் ஆலய திருவிழா கடந்த 4-ந்தேதி தூத்துக்குடி மறைமாவட்ட ஆயர் ஸ்டீபன் ஆண்டவர் தலைமையில் கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில் தூத்துக்குடி மறைமாவட்ட முதன்மை குரு பன்னீர்செல்வம் அடிகளார் மற்றும் மறைமாவட்ட பங்குத்தந்தை பபிஸ்டன் குருக்கள் கலந்து கொண்டனர். தொடர்ந்து 12-ந்தேதி மாலையில் திருவிழா ஆராதனையும், அதனைத்தொடர்ந்து புனித கன்பிரகாசியம்மாள் தேர்பவனியும் நடந்தது.
இதில் ஆழ்வை யூனியன் சேர்மன் ஜனகர், அ.தி.மு.க. ஆழ்வை ஒன்றிய கிழக்கு செயலாளர் விஜயக்குமார், அங்கமங்கலம் பஞ்சாயத்து தலைவர் பானுப்பிரியா பாலமுருகன், குரும்பூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராமகிருஷ்ணன், பரதர் ஊர்நலக்கமிட்டி தலைவர் சிலுவை அந்தோணி சவரிமுத்து மற்றும் ஊர் மக்கள் கலந்து கொண்டனர். தொடர்ந்து நேற்று முன்தினம் தூத்துக்குடி மறைமாவட்ட பொருளாளர் சகாயம் தலைமையில் ஆலய திருப்பலி நடந்தது. ஏற்பாடுகளை பங்குத்தந்தை பபிஸ்டன் மற்றும் குரும்பூர் பரதர் ஊர்நலகமிட்டியினர் ஆகியோர் செய்திருந்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்