search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    குரும்பூர் புனித கன்பிரகாசியம்மாள் ஆலய திருவிழா தேர்பவனி
    X

    திருவிழா தேர்பவனி நடந்த போது எடுத்தபடம்.

    குரும்பூர் புனித கன்பிரகாசியம்மாள் ஆலய திருவிழா தேர்பவனி

    • குரும்பூர் புனித கன்பிரகாசியம்மாள் ஆலய திருவிழா கடந்த 4-ந்தேதி தூத்துக்குடி மறைமாவட்ட ஆயர் ஸ்டீபன் ஆண்டவர் தலைமையில் கொடியேற்றத்துடன் தொடங்கியது.
    • தூத்துக்குடி மறைமாவட்ட முதன்மை குரு பன்னீர்செல்வம் அடிகளார் மற்றும் மறைமாவட்ட பங்குத்தந்தை பபிஸ்டன் குருக்கள் கலந்து கொண்டனர்.

    குரும்பூர்:

    குரும்பூர் புனித கன்பிரகாசியம்மாள் ஆலய திருவிழா கடந்த 4-ந்தேதி தூத்துக்குடி மறைமாவட்ட ஆயர் ஸ்டீபன் ஆண்டவர் தலைமையில் கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில் தூத்துக்குடி மறைமாவட்ட முதன்மை குரு பன்னீர்செல்வம் அடிகளார் மற்றும் மறைமாவட்ட பங்குத்தந்தை பபிஸ்டன் குருக்கள் கலந்து கொண்டனர். தொடர்ந்து 12-ந்தேதி மாலையில் திருவிழா ஆராதனையும், அதனைத்தொடர்ந்து புனித கன்பிரகாசியம்மாள் தேர்பவனியும் நடந்தது.

    இதில் ஆழ்வை யூனியன் சேர்மன் ஜனகர், அ.தி.மு.க. ஆழ்வை ஒன்றிய கிழக்கு செயலாளர் விஜயக்குமார், அங்கமங்கலம் பஞ்சாயத்து தலைவர் பானுப்பிரியா பாலமுருகன், குரும்பூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராமகிருஷ்ணன், பரதர் ஊர்நலக்கமிட்டி தலைவர் சிலுவை அந்தோணி சவரிமுத்து மற்றும் ஊர் மக்கள் கலந்து கொண்டனர். தொடர்ந்து நேற்று முன்தினம் தூத்துக்குடி மறைமாவட்ட பொருளாளர் சகாயம் தலைமையில் ஆலய திருப்பலி நடந்தது. ஏற்பாடுகளை பங்குத்தந்தை பபிஸ்டன் மற்றும் குரும்பூர் பரதர் ஊர்நலகமிட்டியினர் ஆகியோர் செய்திருந்தனர்.

    Next Story
    ×