search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தஞ்சை ஓவியத்தை உலகறிய செய்யும் கும்பகோணம் கைவினை கலைஞர்
    X

    ஜி20 மாநாடு நடைபெறும் அரங்கம் முன்பு கைவினை கலைஞர் பன்னீர்செல்வம் உற்சாகமாக போஸ் கொடுக்கிறார். (அடுத்தபடம்): மாநாட்டு அரங்கில் தஞ்சாவூர் ஓவியம் வரையும் கலைஞர் பன்னீர்செல்வம்.

    தஞ்சை ஓவியத்தை உலகறிய செய்யும் கும்பகோணம் கைவினை கலைஞர்

    • ஜி20 உச்சி மாநாடு டெல்லி பிரகதி மைதானத்தில் உள்ள பாரத் மண்டபத்தில் நடைபெற்று வருகிறது.
    • மாநாட்டு முகப்பில் வைக்கப்பட்டுள்ள நடராஜர் சிலை கும்பகோணத்தில் உள்ள ஸ்தபதிகளால் செய்யப்பட்டுள்ளது.

    தஞ்சாவூர்:

    ஜி20 மாநாட்டில் தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தை சேர்ந்த தஞ்சாவூர் ஓவியம் வரையும் கலைஞர் ஒருவர் கலந்து கொண்டிருப்பது தமிழ்நாட்டுக்கான தனி அடையாளத்தை பெற்றுத்தந்துள்ளது. இதனை வரலாற்று சிறப்பு மிக்க தஞ்சை மண்ணுக்கு கிடைத்த பெருமை என அவர் நெகிழ்ந்து வருகிறார்.

    அதன் பற்றிய விவரம் வருமாறு :-

    ஜி20 உச்சி மாநாடு டெல்லி பிரகதி மைதானத்தில் உள்ள பாரத் மண்டபத்தில் நடைபெற்று வருகிறது. இதில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன், உள்ளிட்ட பல நாடுகளை சேர்ந்த தலைவர்கள் கலந்து கொண்டுள்ளனர்.

    மாநாட்டு அரங்கில் கண்காட்சி மற்றும் கலாசார ங்களை பிரதிபலிக்க கூடிய வகையிலான அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் இந்தியாவின் ஒவ்வொரு மாநிலத்தில் உள்ள பண்பாடு மற்றும் கலாசா ரங்களை போற்ற க்கூடிய விதமான பலவேறு அம்சங்கள் இடம் பெற்றிருப்பது பார்வை யாளர்களை கவர்ந்துள்ளது.

    ஏற்கனவே மாநாட்டு முகப்பில் வைக்கப்பட்டுள்ள நடராஜர் சிலை கும்பகோணத்தில் உள்ள ஸ்தபதிகளால் செய்யப்பட்டுள்ளது. மாநாட்டின் முத்தாய்ப்பாக நடராஜர் சிலை அமைந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

    அந்த வகையில் கும்பகோணம் காமராஜர் நகரை சேர்ந்த ஓவியர் பன்னீர்செல்வம் (வயது 60 ) ஜி20 மாநாட்டில் கலந்து கொண்டுள்ளது தஞ்சாவூர் மாவட்டம் மட்டுமின்றி தமிழ்நாட்டிற்கே பெருமையளிப்பதாக உள்ளது.

    தஞ்சாவூர் ஓவியம் வரைவதில் பன்னீர்செல்வம் திறமையானவர். இவர் சக்கரபாணி ஆர்ட்ஸ் என்ற பெயரில் தஞ்சாவூர் ஓவியம் செய்து வருகிறார். வறுமையில் இருக்க கூடிய ஆண்கள் மற்றும் பெண்களை கண்டறிந்து அவர்களுக்கு தஞ்சாவூர் ஓவியம் வரைய கற்றுத்தந்து வாழ்வாதாரம் ஏற்படுத்தி தருவதுடன் கலை பரவுவதற்கு காரணமாகவும் இருந்து வருகிறார்.

    உலகின் பல நாடுகளுக்கு தஞ்சாவூர் ஓவியத்தின் பெருமையை பறைசாற்றி வரும் பன்னீர்செல்வம், கைவினை கலைஞர்களுக்கான உயரிய விருதான சில்ப் குரு விருது பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

    இந்நிலையில் தென் மாநிலங்களில் தமிழகத்தி லிருந்து ஜி20 மாநாட்டுக்காக அழைக்கப் பட்டிருக்கும் ஒரே கைவினை கலைஞர் என்ற சிறப்பை பெற்றிருக்கிறார் பன்னீர் செல்வம். இதில் நெகிழ்ந்திருக்கும் அவர் இது தஞ்சை மண்ணுக்கு கிடைத்த பெருமை என மகிழ்ச்சியுடன் பேசி வருகிறார்.

    இது குறித்து பன்னீர்செ ல்வம் கூறும்போது ;-

    ``உலகத் தலைவர்கள் பங்கேற்க கூடிய ஜி 20 உச்சி மாநாட்டில் கலைகளுக்கு பெயர் பெற்ற தஞ்சாவூர் மண்ணில் இருந்து, தென்மா நிலங்களில் தமிழகத்திலிருந்து கலந்து கொண்டுள்ள ஒரே கைவினை கலைஞன் நான் என்பது எனக்கு பெருமிதத்தை தருகிறது. இதனை தமிழகத்திற்கு கிடைத்த பெருமையாக கருதுகிறேன்.

    இந்நிலையில் உச்சி மாநாட்டிற்காக இந்தியாவில் உள்ள பல மாநிலங்களை சேர்ந்த சிறந்து விளங்க கூடிய ஏழு கைவினை கலைஞர்கள் அழைக்கப்பட்டனர்.

    தென்இந்தியாவில் உள்ள மாநிலங்களில் தமிழகத்தில் இருந்து கைவினை கலைஞரான என்னை அழைத்திருக்கிறார்கள். நானும் உதவிக்காக என மகன் மனோஜும் இதில் கலந்து கொண்டுள்ளோம்.

    எனக்கு ஒதுக்கபட்டுள்ள அரங்கில் நம் பாரம்பர்யமான தஞ்சாவூர் ஓவியத்தை காட்சிப் படுத்தியிருப்பதுடன் தஞ்சாவூர் ஓவியம் எப்படி உருவாகிறது என உலகில் இருந்து வந்திருக்க கூடிய தலைவர்கள் உள்ளிட்ட பலருக்கு செய்து காட்டி வருகிறேன். இதை பார்த்தவர்கள் தமிழகத்தையும், தஞ்சாவூர் மண்ணின் பாரம்ப ர்யத்தையும் புகழ்ந்தனர்.

    தென் மாநிலங்களில் இருந்து நான் ஒருவன் மட்டுமே இதில் கலந்து கொண்டுள்ளது எனக்கு கிடைத்த பெருமை இல்லை. கலைகளுக்கு பெயர் போன வரலாற்று சிறப்பு கொண்ட தஞ்சாவூர் மண்ணுக்கும் தமிழ்நாட்டிற்கும் கிடைத்த பெருமை. நம் அரசு பண்பாடு மற்றும் கலாசாரத்தின் வளர்ச்சிகளுக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தின் மூலம் கலைகள் வளர்கிறது. நமக்கான அடையாளம் தனித்துடத்துடன் கிடைக்கி றது என்றார்.

    Next Story
    ×