search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நத்தத்தில் கோவில் கும்பாபிஷேகம்
    X

    கோபுர கலசத்திற்கு புனித நீர் ஊற்றப்பட்ட காட்சி.

    நத்தத்தில் கோவில் கும்பாபிஷேகம்

    • கடந்த 19-ம் தேதி சந்தனக் கருப்பு சுவாமி கோவிலில் இருந்து கன்னிமார் தீர்த்தம் ஊர்வலமாக அழைத்து வரப்பட்டு காப்பு கட்டுதலுடன் விழா தொடங்கியது.
    • இதில் சுற்றுவட்டாரங்களிலிருந்தும், வெளி மாவட்டங்களிலிருந்தும்ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

    திண்டுக்கல்:

    நத்தம் கோவில்பட்டி கீழத்தெருவில் உள்ள அய்யனார் சந்தனகருப்பு சுவாமி மற்றும் பகவதி அம்மன் கோவில்களில் கும்பாபிஷேக விழா நடந்தது. இதையொட்டி கடந்த 19-ம் தேதி சந்தனக் கருப்பு சுவாமி கோவிலில் இருந்து கன்னிமார் தீர்த்தம் ஊர்வலமாக அழைத்து வரப்பட்டு காப்பு கட்டுதலுடன் விழா தொடங்கியது. தொடர்ந்து 22-ம் தேதி முதல் நாள் அனுக்கை, தனபூஜை, கணபதி ஹோமம், முதல் கால யாகசாலை பூஜைகள் நடந்தது.

    மறுநாள் அதே யாகசாலையில் 2-ம் மற்றும் 3-ம் கால யாக பூஜைகள் நடந்தது. நேற்று 4-ம் கால யாகசாலை பூஜைகளை தொடர்ந்து காசி, ராமேஸ்வரம், கரந்தமலை, அழகர் மலை உள்ளிட்ட பல்வேறு புனித ஸ்தலத்தில் இருந்து கொண்டு வரப்பட்ட புனித தீர்த்த குடங்கள் பூஜைகளுக்கு பிறகு யாகசாலையில் இருந்து கோபுர உச்சிக்கு ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டது. அங்கு சிவாச்சாரியார்களின் வேத மந்திரங்கள் முழங்க குடம்,குடமாக கலசத்தில் புனித தீர்த்தங்கள் ஊற்றப்பட்டது.

    அப்போது வானத்தில் கருடன்கள் வட்டமிட்டன. இதில் சுற்றுவட்டாரங்களிலிருந்தும், வெளி மாவட்டங்களிலிருந்தும்ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். அவர்களுக்கு பூஜை மலர்களும், புனித தீர்த்தங்களும், அன்னதானமும் வழங்கப்பட்டன. விழாவிற்கான ஏற்பாடுகளை கீழத்தெரு ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.

    Next Story
    ×