என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
விழுப்புரம் கோவிந்தசாமி நகர் சிவவிஷ்ணு கோவிலில் கும்பாபிஷேக விழா
- விழுப்புரம் கோவிந்தசாமி நகர் சிவவிஷ்ணு கோவிலில் கும்பாபிஷேக விழா நடந்தது.
- விழுப்புரம் கலெக்டர் அலுவலகம் பின்புறம் சிவ விஷ்ணு, விநாயகர், வள்ளி, தெய்வானை, சுப்பிரமணியர் சுவாமி, ஆஞ்சநேயர், தட்சிணாமூர்த்தி, சிவதுர்க்கை, சனீஸ்வர கோவில் உள்ளது.
விழுப்புரம்:
விழுப்புரம் கலெக்டர் அலுவலகம் பின்புறம் அமைந்துள்ள கோவிந்தசாமி நகர் இ.எஸ்., கார்டன் கோவில் வளாகத்தில் உள்ள சிவ விஷ்ணு, விநாயகர், வள்ளி, தெய்வானை, சுப்பிரமணியர் சுவாமி, ஆஞ்சநேயர், தட்சிணாமூர்த்தி, சிவதுர்க்கை, சனீஸ்வர கோவில் உள்ளது. இந்த கோவிலில் கும்பாபிஷேகம் இன்று காலை நடந்தது. கலசங்களுக்கு காலை 6.45 மணிக்கு புனிதநீர் ஊற்றி, மகா கும்பாபிஷேகத்தை மயிலம் பொம்மபுர ஆதீனம் இருபதாம் பட்டம் ஸ்ரீலஸ்ரீ சிவஞான பாலய சுவாமிகள் தலைமையில் நடந்தது.
அப்போது கோவில் நிர்வாகிகள் சுப்பிரமணியன், முன்னாள் எம்.எல்.ஏ., புஷ்பராஜ், காளிதாஸ், திருப்பதி பாலாஜி, பாலகிருஷ்ணன், சிவகுமார், கிருஷ்ணமூர்த்தி, தயானந்தம் இ.எஸ். பாஸ்கர், அசோக்குமார், பாபு, கார்த்தி, தமிழ் கல்லூரி முன்னாள் முதல்வர் சற்குணம், தொழிலதிபர் சிவா ஆகியோர் உட்பட பலர் கலந்து கொண்டனர். பின்னர் சுவாமிக்கு பால், சந்தனம், பன்னீர், தேன் ஆகிய நறுமணப் பொருட்களினால் சிறப்பு அபிஷேகம், வழிபாடுகள் நடந்தது. இதற்கான ஏற்பாடுகளை அமிதகணபதி சாரிட்டபிள் டிரஸ்ட் மற்றும் பகுதி வாழ் பொதுமக்கள் ஆகியோர் சிறப்பாக செய்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்