என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மெஞ்ஞானபுரம் அருகே முத்தாரம்மன் கோவில் கும்பாபிஷேகம் - திரளான பக்தர்கள் பங்கேற்பு
    X

    முத்தாரம்மன் கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு விமான கலசங்களுக்கு புனித நீர் ஊற்றப்பட்ட போது எடுத்த படம்.

    மெஞ்ஞானபுரம் அருகே முத்தாரம்மன் கோவில் கும்பாபிஷேகம் - திரளான பக்தர்கள் பங்கேற்பு

    • கும்பாபிஷேகத்தை முன்னிட்டு காலை 8 மணிக்கு 4-ம் கால யாக பூஜை தொடங்கியது.
    • இரவு 10 மணிக்கு அம்பாள் தேரில் எழுந்தருளி திருவீதி உலா நடைபெற்றது.

    திருச்செந்தூர்:

    மெஞ்ஞானபுரம் அருகே உள்ள வேப்பங்காடு முத்தாரம்மன் கோவில்

    கும்பாபிசேகத்தை முன்னிட்டு கடந்த செவ்வாய்க்கிழமை மகா கணபதி ஹோமத்துடன் தொடங்கி நவக்கிரக ஹோமம், புனித நீர் எடுத்து வருதல், வாஸ்து சாந்தி பூஜையுடன் முதலாம் கால யாக பூஜை நடந்தது. நேற்று முன்தினம் (புதன்கிழமை) காலை வேத பாரா யணத்துடன் 2-ம் மற்றும் 3-ம் கால யாகசாலை பூஜை நடைபெற்றது.

    கும்பாபிஷேகம்

    விழாவின் சிகர நிகழ்ச்சியான கும்பாபிஷேகம் நேற்று நடைபெற்றது. இதை முன்னிட்டு காலை 8மணிக்கு 4-ம் கால யாக பூஜை தொடங்கியது.காலை 10 மணிக்கு கோ பூஜையும், காலை 11 மணியளவில் கோபுர கலசங்களுக்கு புனித நீர் அடங்கிய கும்ப கலசம் விமான தளத்திற்கு எடுத்து வரப்பட்டு கோபுர கலசங்களுக்கு புனித நீர் ஊற்றப்பட்டது. தொடர்ந்து அம்பாள் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு அபிசேகம், அலங்காரம் நடைபெற்று தீபாராதனைக்கு பின் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

    தேர்பவனி

    இரவு 7 மணிக்கு திருவிளக்கு பூஜையும், புஷ்பா ஞ்சலியும் நடை பெற்றது. இரவு 10 மணிக்கு அம்பாள் தேரில் எழுந்தருளி திருவீதி உலா நடைபெற்றது. விழாவில் 3 நாட்கள் மூன்று வேலை அன்னதானம் வழங்கப்பட்டது

    நிகழ்ச்சியில் பெருங்குளம் செங்கோல் ஆதின 103-வது குரு மகா சன்னிதானம் சிவப்பிரகாச தேசிக சத்தியஞான பரமாச்சார்ய சுவாமிகள், குரு சிவசந்திரன், பஞ்சாயத்து தலைவர்கள் விஜயராஜ்,(நங்கைமொழி)ஆதிலிங்கம், (லெட்சுமிபுரம்) தொழில் அதிபர் உதயகுமார் உள்பட திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். விழா ஏற்பாடுகளை கோவில் தர்மகர்த்தா செந்தூர்பாண்டி நாடார்மற்றும் திருப்பணி குழுவினர்கள் செய்திருந்தனர்.

    Next Story
    ×